ரஜினியும் மரியாதையும்

பத்து ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன்.  ரஜினிகாந்தின் நண்பர் ஒருவர் என்னிடம் ரஜினி பற்றி ஒரு கருத்தைச் சொன்னார்.  அது எனக்கு ரஜினி பற்றிய முக்கியமான ஒரு அவதானமாகத் தோன்றியது.  ”பணக்காரர்கள் மீது ரஜினிக்குத் தனிப்பட்ட மரியாதை உண்டு.”  ஏனென்றால், பணம் சம்பாதிப்பதுதான் மிகவும் கடினமாக காரியம்.  அதை ஒருவர் சாதித்திருக்கிறார் என்றால், அவர் நம் மரியாதைக்கு உரியவரே.  எஸ். ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களும் மரியாதைக்கு உரியவர்களே என்றாலும் அவர்களுக்குப் பணம் சம்பாதிக்கும் திறமை இல்லை.  ஆகவே … Read more

மூன்று தினங்கள்

மூன்று தினங்களெல்லாம் எனக்கே நான் மெடிக்கல் லீவ் கொடுப்பது சாத்தியம் இல்லை. ஆனால் கொடுக்கும்படி ஆகி விட்டது. மூன்று தினங்களுக்கு முன் தொண்டையில் லேசாக வலி. அடுத்து அது ஜுரமாக மாறும். நான் ஸ்ரீராமிடம் கேட்டு மாத்திரை சாப்பிடுவேன். ஜுரம் போய் விடும். ஆனால் தினமும் இருபது மணி நேரம் தூங்க வேண்டி வரும். அது கூட நிம்மதியான உறக்கம் அல்ல. மயக்கம் கலந்த உறக்கம். கூடவே உடம்பு வலியும் உண்டாகும். இன்னும் நிறைய பக்க விளைவுகள். … Read more