வனத்தில் சில இரவுகள்

திருவண்ணாமலையில் ஜூன் முப்பதாம் தேதி உலக சினிமா பயிலரங்கை முடித்துவிட்டு மறுநாள் நானும் சீனியும் ராஜா வெங்கடேஷும் அந்த வனத்தை நோக்கிக் கிளம்பினோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறது அந்த அடர்ந்த வனம். பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அதை அரசாங்கமே சுற்றுலாப் பயணிகளின் பார்வையிலிருந்து மறைத்து வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. சீனியும் ராஜாவும் மாற்றி மாற்றி கார் ஓட்டினார்கள். வழியில் கறி விருந்துக் கடைகள் நிறைய இருந்தன. உணவு உலகத் தரம். இங்கே சென்னையில் ஈரல் வறுவல் என்று கேட்டால் … Read more