6. எழுத்தாளன் உருவில் ஒரு அகோரி

நேற்று கூறியது போல் இன்று தயிர்வடை சென்ஸிபிலிட்டியின் அடுத்த அத்தியாயத்தை எழுத முடியாது போல் தெரிகிறது.  அராத்துதான் காரணம்.  அவர்தான் அசுரகணத்தையும் அபிதாவையும் மீண்டும் படிக்க வேண்டிய தேவையை உண்டுபண்ணி விட்டார்.  க.நா.சு. பற்றி நான் ஆற்றிய நான்கு மணி நேர உரையைக் கேட்டிருக்கிறீர்களா?  கொரோனா காலத்தில் மாதம் ஒரு உரை என்று ஸூம் மூலம் கொடுத்தேன்.  நம் இணையதளத்தில் இருக்கிறது.  வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்.  வழக்கம்போலவே அந்த உரைக்காக ஒரு மாத காலம் இரவு பகலாகப் … Read more