எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்
நடைப்பயிற்சியில்ஒருகாலத்தில் துணையாயிருந்தஇசை இன்று.அலுத்துவிட்டது. ஒரு நண்பனை அழைத்தேன்.“இப்போதுதான் பாஸ்டனிலிருந்து வந்தேன்.இது இரவா பகலாஎன்றே தெரியவில்லை.பிறகு பேசலாமா?”என்றான். இன்னொருவனை அழைத்தேன்.“குடித்துக் குடித்துஉணவுக்குழாய் கெட்டுப்போய்படுக்கையில் கிடக்கிறார்உங்கள் நண்பர்”என்றாள் அவன் மனைவி.அழாமல் இருக்க முயற்சிப்பதுகுரலில் தெரிந்தது மற்றொரு நண்பன்:நாற்பத்தைந்து வயதில்மனைவி செக்ஸை நிறுத்திவிட்டாள்மூன்று வருடமாகதினமும் மூன்று முறைசுயமைதுனத்தில்ஓடுகிறது வாழ்க்கை என்று புலம்பினான் ஒருகாலத்தில்“காலையில் உன்னோடு பேசினால்நாள் முழுக்க உற்சாகம்,”என்றவள்,இப்போது“காலையில் பேசினால்மன உளைச்சல்.மாலையில் பேசலாமா?”என்கிறாள். இன்னொரு தோழிக்குஇரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.பார்த்தாளாஎன்றே தெரியவில்லை.நீலக்கோடு தெரிந்தால்பெரிய அசௌகரியம்என்றாள். எது குறித்தும்புகாரில்லைஎல்லோரும்இன்புற்றிருக்க வேண்டும்.