ஒரு அற்புதத் தருணம்

அன்புள்ள சாரு,
நான் 24 வயது இளைஞன். மூன்று வருடங்களாக தங்களின் எழுத்தை வாசித்து வருகிறேன். கோவை புத்தகக் கண்காட்சியில் நேரில் சந்தித்திருக்கிறேன். தங்களுடைய zoom உரையாடல்களில் பூனைகள் தங்கள் தோள் மீது அமர்வதும் சுற்றி வருவதையும் பார்த்திருக்கிறேன். ஒரு surreal அனுபவமாக இருந்தது. இன்று ஶ்ரீ வில்லிபுத்தூர் மடவார்குளம் சிவன் கோவிலில் கொடிமரம் பின் இருக்கும் ஆமை வடிவ கல்லில் அமர்ந்து கண்களை மூடினேன் யாரோ கையைத் தொடுவது போல் இருந்தது. கண்களைத் திறந்து பார்த்தால் ஒரு வெள்ளை நிறப் பூனைக்குட்டி, தடவிக் கொடுத்தேன் வந்து மடியில் அமர்ந்து கொண்டது. கண்களை மூடி பூனைக்குட்டியைத் தடவிக் கொடுத்த படி அமர்ந்திருந்தேன். ஒரு அற்புத தருணமாக இருந்தது.


பணிவன்புடன்,

அஸ்வின் குமார்.

மே 7, 2022.