கடவுளின் பாதையில்…

வாசகர் வட்ட நண்பர்களின் இமாலயப் பயணம் முடிவாகி விட்டது.  நானும் இன்னும் இரண்டு நண்பர்களும் மட்டும் ஜீப்பில்.  மற்ற நண்பர்கள் மோட்டார் பைக்கில்.  இப்போது அங்கே மழை பெய்து என்னென்னவோ ஆகி இருக்கிறது.  இருந்தாலும் ஜூலை கடைசி வாரத்திற்குள் எல்லாம் சரியாகி விடும்.  நாங்கள் பத்து பேர் செல்கிறோம்.  இன்னொருவரும் வருகிறார்.  அவர் இருப்பதால் பயம் இல்லை.  அவர் கடவுள்.  கடவுளைக் காண, கடவுளின் பாதையில், கடவுளோடு ஒரு பயணம் இது. பயணத்தின் போது மது அருந்துவதில்லை … Read more

இறைவனுக்கு நன்றி…

இறைவனுக்கும், என் வாசகர் வட்ட நண்பர்களுக்கும், அவந்திகா மற்றும் கார்த்திக்குக்கும், என் மொழிபெயர்ப்பாளர்களுக்கும்  என் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்… http://www.fondation-janmichalski.com/en

வர்றியா… வர்றியா…

ஃபேஸ்புக்கில் என் பெயர் மறுபடியும் இழுக்கப்பட்டிருக்கிறது.  தமிழில் ஃபேஸ்புக்கில் 90 சதவிகிதம் கிரிமினல் மனம் கொண்டவர்களே அலைந்து கொண்டிருக்கிறார்கள்.  எனக்கு இவர்களோடெல்லாம் உரையாடிக் கொண்டிருப்பதில் விருப்பம் இல்லை; முக்கியமாக நேரமும் இல்லை. மனுஷ்ய புத்திரன் திரு மு. கருணாநிதியை அவரது பிறந்த நாள் அன்று வாழ்த்திப் பேசினார் என்ற விஷயம் இணையத்தில் படு சூடான விவாதமாக மாறியது பற்றி நண்பர்கள் மூலம் அறிந்தேன்.  எனக்கு இதைப் படிக்கவோ இதில் கலந்து கொள்ளவோ விருப்பம் இல்லை; நேரம் இல்லை. … Read more

துளி துளி…

11th வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கும் ஆதித்யா என்ற மாணவன் எனக்கு ஒரு வித்தியாசமான கடிதம் எழுதியிருந்தான்.  வழக்கம் போல் ஆங்கிலத்தில்தான்.  இரண்டு வரிகளே இருந்த அந்தக் கடிதத்தில் ஒரு பாடலின் லிங்க் இருந்தது.  இந்தப் பாடலை ஆதித்யாவின் வகுப்பு மாணவர்களே எழுதி, இசையமைத்து, பாடியும் இருக்கிறார்கள். பின்னணி இசையும் அவர்களே. பாடிய மாணவனின் பெயர் மட்டும் எழுதியிருக்கிறான். ராஜகோபால்.  கீ போர்ட் வாசித்திருக்கும் மாணவன், கிதாரிஸ்ட் பெயர் எல்லாம் இல்லை.  அந்த இரண்டு பேரும் கூட ராஜகோபாலைப் … Read more