ஓர் அற்புதத் தருணம்

பிரபு காளிதாஸ் என்னை எடுத்த புகைப்படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் இது. சிற்பி வித்யாஷங்கர் அவர்களின் இல்லத்தில் எடுத்தது. சிப்பிப்பாறை இன நாய். பெயர் மறந்து விட்டேன். பொதுவாக நாயைக் கட்டிப் போடக் கூடாது. ஆனால் ஸ்தபதி 80 வயது முதியவர் என்பதால் அதைக் கொஞ்சம் கட்டிப் போட்டிருக்கிறார்.   அவருடைய செல்லக் குட்டி எனக்கு முத்தமிட்ட அந்தத் தருணம் வாழ்வில் மறக்க முடியாதது.  பிரபுவுக்கு நன்றி.