ப்யூகோவ்ஸ்கியின் கவிதை வாசிப்பு

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் கவிதையை அறிமுகப்படுத்தினான் நண்பன் அப்படி ஒன்றும் பெரிதாக ஈர்க்கவில்லை ஆனாலும் அவனிடம் ஒரு வசீகரம் இருந்ததை உணர்ந்தேன் அவன் முகமே ஒரு வசீகரம் அவன் குடி ஒரு வசீகரம் ப்யூகோவ்ஸ்கியின் கவிதை வாசிப்பு என்றால் மேடையில் ஒரு கலயம் இருக்க வேண்டும் அதி குடியால் வாந்தி வரும்போது உதவும் கலயம் இனிமேல் குடித்தால் சங்குதான் என்றார் மருத்துவர் சரியென்று சொல்லிவிட்டு மீண்டும் குடித்தான் ப்யூக் அதற்குப் பிறகும் பத்து ஆண்டுகள் … Read more

சொற்களால் தின்னப்பட்டவன்

என் சொல் என் தேகம் என் சொல் என் சுவாசம் என் சொல் என் மரணம் என் சொல் என் தீர்வு ஒருநாள் என் சொற்களெல்லாம் திரண்டு வந்து என்னைப் புசிப்பது போல் கனாக்கண்டு எழுந்தேன் அது கனா அல்ல என் உடலை சொற்கள் தின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன் இதை எழுதும்போதே ரோமக் கால்கள் சிலிர்க்கின்றன ஆம் என் உடலை சொற்கள் தின்று கொண்டிருந்தன பார்த்துப் பார்த்து வளர்த்த உடல் சொற்களுக்குத் தீனியாவது கண்டு ஒருக்கணம் வருந்தினாலும் … Read more

இன்றைய கவிதை: ஸ்தூல சாட்சி

”தேன்சிட்டே, தேன்சிட்டே, எங்கே இரண்டு நாட்களாகக் காணோம்?” “ஊருக்குப் போயிருந்தேன்.” ”ஓ, அதெல்லாம் உங்களுக்கும் கூட உண்டா?” “பின்னே, ஊரென்பது உங்களுக்கு மட்டுமானதா?” தேன்சிட்டு கழுத்தை ஒரு பக்கம் நொடித்தது. செக்ஸியாக இருக்கிறதே என்றெண்ணிய மறுகணமே மானசீகமாகக் கன்னத்தில் போட்டுக் கொண்டேன். ஊரில் என்ன விசேஷம் என்றதற்கு மகளோடு போயிருந்தேன் என்றது தேன்சிட்டு ”ஓ, அதெல்லாம் உங்களுக்கும் கூட உண்டா?” “பின்னே, உங்களுக்கு மட்டும்தானா?” என்று சொன்ன தேன்சிட்டு மீண்டும் கழுத்தை நொடித்தது. செக்ஸி செக்ஸி என … Read more

ஏன் கவிதை எழுதுகிறாய்?

ஏன் கவிதை எழுதுகிறாய்  என்றார் சிலர்நானெங்கே எழுதுகிறேன்,கவிதைதன்னைத் தானேஎழுதிக் கொள்கிறதுநானென்ன செய்ய என்றேன்அதனிடமே கேள் என்றார்கள்தன்னைத் தானே எழுதிக் கொண்டகவிதையிடம் ஒருநாள் கேட்டேன்கவிதையெழுதுவது எப்படி எனசிறகை விரி காற்றில் பறஎன்றது கவிதைஎனக்கு சிறகில்லையே என்றேன்இல்லாத சிறகை விரி, அஃதே கவிதைஎன்று சொல்லிவிட்டுப்பறந்தது கவிதை

25. சொற்கடிகை

இந்த இடத்துக்கு வந்து நாட்கள் பல ஆகி விட்டன.  காரணம், மிக அவசரமான வேலை.  ஆங்கிலப் பதிப்பாளர் ஔரங்ஸேபின் அத்தியாயவாரியான சுருக்கம் கேட்டிருந்தார்.  அதைத்தான் எழுதி அனுப்பி வைத்தேன்.  எழுதுவது மிகப் பெரும் சவாலாக இருந்தது.  இதற்கிடையில் வினித்தின் பிறந்த நாள் வந்து போனது.  முந்தின தினம் மாலை சந்திப்புக்கு என்னை அழைக்கலாம் என்று நினைத்ததாகச் சொன்னான் வினித்.  சென்றிருந்தால் இரவு முழுதும் பேசிக் கொண்டிருந்திருக்கலாம்.  ஆனால் அந்த வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது வினித் என்றேன்.  … Read more