பூச்சி – 29

ஓ, இந்தப் பசு விஷயத்திலிருந்து அடுத்த அடி வைக்கலாம் என்று பார்த்தால் முடிய மாட்டேன் என்கிறது.  நேற்று சொல்ல மறந்த விஷயம்:  பல ஆண்டுகளாக அன்பு சிக்கன் கடைக்குப் போவதை நிறுத்தி விட்டேன்.  அன்பு பற்றி எக்ஸைலில் எழுதியிருக்கிறேன்.  கோழி விற்றுக் கோடீஸ்வரன் ஆனவர்.  சில பல ஆண்டுகளுக்கு முன்பு அன்பு ஒரு புதிய இடத்திலிருந்து விற்பதற்காகக் கோழி வாங்கியிருக்கிறார்.  மற்ற கறியெல்லாம் ஜவ்வு மாதிரி இழுக்கும்.  இல்லாவிட்டால் நார் நாராக வரும்.  தமிழ்நாடு பூராவும் சிக்கன் … Read more

பூச்சி 28

கணேஷின் கேள்விகள் சாதாரணமாகப் புறக்கணித்து விடக் கூடியவை அல்ல.  அதனால்தான் இத்தனை விரிவாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.  இதே கேள்விகளை, சந்தேகங்களைத் தாங்களும் கொண்டிருப்பதாகப் பலரும் எனக்கு எழுதியிருக்கின்றனர்.  ”ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் மாடுகளைக் கொடூரமாக கொல்கின்றார்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஒரு உயிரைக் கொல்வதே கொடூரம்தான்! மனிதன் சாப்பிடுவதற்காக ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் இறால், புறா, காடை, இன்னபிற என அனைத்தையுமே கொல்லத்தானே செய்கிறான்? கொல்வதில், கொடூரமாகக் கொல்வது அன்பாகக் கொல்வது என தனித்தனியாக ஏதேனும் இருக்கிறதா?” … Read more

பூச்சி – 27

எதை எழுதுவது எதை விடுவது என்றே தெரியவில்லை.  என் அம்மா அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்தான்.  எங்கள் வீட்டில் வாரம் மூன்று நாளாவது மீன் இருக்கும்.  நைனா காய்கறி வாங்கினதாக எனக்கு ஞாபகமே இல்லை.  ஊரில் அப்போது காய்கறிக் கடையும் இல்லை.  தெருவிலும் யாரும் காய் விற்றுக் கொண்டு போய் பார்த்ததில்லை.  முதல் விஷயம் ஐம்பதுகளில் நாகூரைப் போன்ற ஒரு சிற்றூரில் காய்கறியெல்லாம் கடைகளில் வாங்கக் கூடியது என்றே எங்களுக்குத் தெரியாது.  வீட்டுக் கொல்லையில் விளையும் காய்கறிகள்தான்.  … Read more

பூச்சி – 26

கணேஷுக்கான பதிலை எழுத இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் பத்தரை ஆகி விட்டது. தூக்கம் கண்களைச் சுழற்றுகிறது. நாளை மதியத்துக்குள் இதன் தொடர்ச்சியை எழுதி விடுவேன். படியுங்கள்: மாட்டு இறைச்சியையோ பூனை நாய் உண்பவர்களையோ நான் கொடூரமானவர்களாக நினைக்கவில்லை.  எப்படி நாயை உண்கிறார்கள் என்ற பதற்றத்தையே நான் அப்படி வெளிப்படுத்தினேன்.  மீனும் நாயும் ஒன்று அல்ல.  மீனும் மாடும் ஒன்று அல்ல.  மீனும் யானையும் ஒன்று அல்ல.  மீனும் குதிரையும் ஒன்று அல்ல.  மீனும் ஒட்டகமும் ஒன்று … Read more

பூச்சி – 24

“எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. உங்களது பார்வையில் எனது சந்தேகம் அபத்தமாகக்கூடத் தோன்றலாம். புரிதலுக்காக மட்டுமே கேட்கிறேன். மனிதன் இயற்கையை அழிக்கிறான் என்னும் உங்களது கருத்துடன் நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன். அந்த வருத்தமும் ஆற்றாமையும் எனக்கும் உண்டு. அதே சமயம் மாட்டு இறைச்சி உண்பவர்களையும், பூனை, நாய் உள்ளிட்டவற்றை உண்பவர்களையும் கொடூரமானவர்கள் போல சித்தரிப்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் மாடுகளைக் கொடூரமாக கொல்கின்றார்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஒரு உயிரைக் கொல்வதே கொடூரம்தான்! மனிதன் … Read more