சட்டத்துக்கு முன் அனைவரும் சமமே…

எஸ்.வி. சேகருக்கு உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள செய்தி நீதித் துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.  ஏனென்றால், பாடகர் கோவன் அரசுக்கு எதிராகப் பாடிய போது ஏதோ தேசத் துரோகியை, பயங்கரவாதியைக் கைது செய்வது போல் ஒரு போலீஸ் பட்டாளமே போய் அவரைக் கைது செய்தது.  இப்படித்தான் அரசுக்கு எதிராக நோட்டீஸ் விநியோகித்த கல்லூரி மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் போட்டது அரசு.  இந்த இரண்டு சம்பவங்களையும் உயர்நீதி மன்ற நீதிபதி மேற்கோள் காட்டி, … Read more

kaala songs…

காலா பாடல்களைக் கேட்டேன். இந்த நாட்டில் ஒரு சினிமாப் பாட்டைக் கூட சினிமாப் பாட்டாக எங்கே கேட்க முடிகிறது? இத்தனைக்கும் யோகி பி, சந்தோஷ் நாராயணன் இருவரும் எனக்கு மிகவும் பிடித்தவர்கள்தான். ஆனால் காலா பாடல்கள் அனைத்தும் அரசியல் செய்திகளைக் கொண்டிருக்கின்றன. அடங்க மறுப்போம், புரட்சி செய்வோம் என்றெல்லாம் அறை கூவல் விடுக்கின்றன. ரஜினிதான் நம்மைக் காப்பாற்றப் போகின்றவர் என்று உரக்கக் கூவுகின்றன பாடல்கள். உலகம் முழுக்க ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிகள் அனைத்தும் இதே மாதிரியான சொல்லாடல்களைக் … Read more

ஆண்டவன் நினைத்தால்…

சமீபத்தில் கோலா பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் ரஜினி பேசியதை பத்திரிகையில் படித்தேன்.  அந்தப் பேச்சின் நடுவில் அரசியலுக்கு வர மாட்டேன் என்கிறார்.  பேச்சின் இறுதியில் ஆண்டவன் நினைத்தால் வருவேன் என்கிறார்.  வாயில் கெட்ட வார்த்தைதான் வருகிறது. தமிழ்நாடு என்ற இடத்தில் ஒரு படத்துக்கு 60 கோடி (அறுபது கோடியா, இல்லை, அதுக்கும் மேலயா?) ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் ஒரு நடிகர் அரசியலில் நுழையலாமா வேண்டாமா என்று ஜோசியம் சொல்வதைத் தவிர ஆண்டவனுக்கு வேறு … Read more

நிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை

தமிழ்நாட்டில் எழுத்தாளர் என்றால் கூட அர்த்தம் புரிந்து விடும். ஆனால் புத்திஜீவி என்றால் அப்படி ஏதும் புதியவை ஆர்கானிக் காய்கறி வந்துள்ளதா என்று கேட்பார்கள். தமிழ்நாட்டில் நான் வெகுவாக மதிக்கும் புத்திஜீவிகளில் ஒருவர் டி. தர்மராஜ். அவர் முகநூலில் எழுதியிருந்த இந்தச் சிறிய கட்டுரை நிர்மலா தேவி பிரச்சினையில் என் எண்ணத்தை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளது. இந்த விஷயம் என்னைப் பெரிதும் பாதித்து விட்டது. அந்த நான்கு மாணவிகளும் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப மறுத்தும் அந்த … Read more

சோறே தெய்வம்!!!

வரும் 18-ஆம் தேதியிலிருந்து 22-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நான் வெளியில்தான் சாப்பிட்டாக வேண்டும்.  எனக்கு சமைக்கப் பிடிக்கும் என்றாலும் என் ஒருவனுக்காக சமைப்பது அலுப்படிக்கும் விஷயம்.  அவந்திகா வெளியூர் செல்கிறாள்.  என் வீட்டை ஒட்டியிருக்கும் தாவத் உணவு விடுதி ஆடம்பரமாக இருக்கிறதே தவிர எதை வாங்கினாலும் அதில் நூறு மில்லி அளவுக்கு எண்ணெய் மிதக்கிறது.  No exaggeration.  நூறு மில்லி.  என் வீட்டுக்கு எதிர்சாரியில் உள்ள பாம்ஷோர் தேவலாம்.  ஆனால் அங்கேயே சாப்பிட்டு சாப்பிட்டு … Read more