nothing else matters…

ஏற்காடு பயணம் இனிதே முடிந்தது.  சென்னையிலிருந்து நானும், அராத்துவும், நடிகர் பார்த்திபனும், அவரது உதவியாளர் ஒருவரும் சென்றிருந்தோம்.  பல நண்பர்கள் ஸ்டோரி டிஸ்கஷனா என்று கேட்டார்கள்.  என் சினிமா உலக நண்பர்கள் என்னோடு என்றுமே சினிமா சம்பந்தமாகப் பேசியதில்லை.  ஒரே விதிவிலக்கு கௌதம் மேனன்.  கௌதம் மேனனும் பார்த்திபனும் மிக நன்றாகப் பழகும் நண்பர்கள்.  ஸீரோ டிகிரியின் ஆங்கிலப் பதிப்பு வெளியீட்டு விழா பார்க் ஓட்டலில் நடந்த போது – ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு – கௌதம் … Read more

கடவுளின் பாதையில்…

வாசகர் வட்ட நண்பர்களின் இமாலயப் பயணம் முடிவாகி விட்டது.  நானும் இன்னும் இரண்டு நண்பர்களும் மட்டும் ஜீப்பில்.  மற்ற நண்பர்கள் மோட்டார் பைக்கில்.  இப்போது அங்கே மழை பெய்து என்னென்னவோ ஆகி இருக்கிறது.  இருந்தாலும் ஜூலை கடைசி வாரத்திற்குள் எல்லாம் சரியாகி விடும்.  நாங்கள் பத்து பேர் செல்கிறோம்.  இன்னொருவரும் வருகிறார்.  அவர் இருப்பதால் பயம் இல்லை.  அவர் கடவுள்.  கடவுளைக் காண, கடவுளின் பாதையில், கடவுளோடு ஒரு பயணம் இது. பயணத்தின் போது மது அருந்துவதில்லை … Read more

the alchemy of desire

சற்று முன்புதான் அராத்துவிடமும் துரோகியிடமும் பேசினேன். (என் நண்பர்களின் பெயரைப் பாருங்களேன். உத்தமத் தமிழ் எழுத்தாளனுக்கு இப்படி அமையுமா?) ஒரு வாரமாக வாக்கிங் போகவில்லை; சரியாகத் தூங்கவில்லை; ராணுவ ஒழுங்குடன் வாழும் என் தினசரி வாழ்க்கை அத்தனையும் தலைகீழ் ஆயிற்று. ஒரு நாவலால். தருண் தேஜ்பால் எழுதிய the alchemy of desire. இரண்டு லட்சம் வார்த்தைகள். பொடி எழுத்தில் 550 பக்க்ங்கள். என் வாழ்க்கையை ஒளிந்திருந்து பார்த்து யாரோ எழுதியது போல் இருந்தது. ஒரே ஒரு … Read more

நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

Amazon மூலம் kindle edition ஆக ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள என்னுடைய சிறுகதைத் தொகுதி Morgue Keeper-இன் மொழிபெயர்ப்பு படு மோசம் என்பதாக ஒரு அன்பர் எழுதியிருக்கிறார்.  இதை நான் விமர்சனமாக, ஒரு அபிப்பிராயமாக எடுத்துக் கொள்ள முடியாது.  ஏனென்றால், morgue keeper கதை ப்ரீதம் சக்ரவர்த்தியால் மொழிபெயர்க்கப்பட்டு தெஹல்காவில் வெளிவந்தது.  அதுவும் தெஹல்காவின் சிறப்பு மலரில்.  மொழி நன்றாக இல்லாவிட்டால் தெஹல்காவில் வரும் சாத்தியம் இல்லை.  திர்லோக்புரி கதையும் ப்ரீதம் சக்ரவர்த்தியால்தான் மொழிபெயர்க்கப்பட்டது.  அவர்தான் ஸீரோ டிகிரியையும் … Read more

ஒரு நற்செய்தி

சில மாதங்களாகவே சாருஆன்லைனில் அவ்வளவு அதிகமாக நான் எழுதுவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.  இது சம்பந்தமாக கோபக் கடிதங்கள் அவ்வப்போது எனக்கு வருவதுண்டு.  அராத்து, துரோகி போன்ற நண்பர்கள் கூட நேரில் இது பற்றி திட்டுவதுண்டு.  பதிலுக்கு சிரிப்பதோடு சரி.  நான் அமைதியாக இருக்கிறேன் என்றால் ராப்பகலாக வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்று பொருள். இரண்டு தினங்களாக வாக்கிங் கூட போகாமல் – புயல் அடித்த தினங்களில் கூட வாக்கிங்கை நிறுத்தியதில்லை – கோணல் பக்கங்கள் நூலை … Read more