புத்தக விழா மகாத்மியங்கள் (2)

ஆஹா, ஆஹா, முறுக்கு கிடைத்து விட்டது. ஆம், என் மனம் கவர்ந்த முறுக்கை எனக்கு ஆசை ஆசையாகத் தின்னக் கொடுக்கும் செந்தில் குமரன் சேலத்திலிருந்து சென்னை வந்து விட்டார். முறுக்கும் கொண்டு வந்திருப்பார் என்று நினைக்கிறேன். அந்த மாதிரி முறுக்கை நீங்கள் உலகத்தில் வேறு எங்கேயும் சாப்பிட்டிருக்க முடியாது. சென்னை முறுக்கெல்லாம் முறுக்கே கிடையாது. செந்தில், ஒரு முக்கிய விஷயம். பா.ராகவன் எதிரில் முறுக்கைப் பிரித்து விடாதீர்கள். அந்த ஆளும் என்னை மாதிரிதான் ஒரு சாப்பாட்டுப் பிரியன். … Read more

புத்தக விழா மகாத்மியங்கள்

ஒரு வாசகியின் கடிதம்: ”ஸீரோ டிகிரி அரங்கில் வந்து பார்த்தால் உங்களை ஹக் பண்ணலாமா?  கிஸ் பண்ணலாமா?” நான் எழுதிய பதில்: “அம்மணி, ஒரு துறவி என்பவன் சமூகத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தவன்.  ஆனால் இப்போது எனக்கு சில கடமைகள் உள்ளன.  ரிஸ்க் எடுக்க முடியாது.  கொரோனா காரணமாக நாலு அடி எட்ட நின்றே பேசவும்.”  இன்று மாலை நான்கு மணிக்கு சந்திப்போம்.  எல்லோரும் புத்தகம் வாங்கவும் தமக்குப் பிடித்த எழுத்தாளர்களைச் சந்திக்கவும், எழுத்தாளராக இருந்தால் புத்தகங்களில் … Read more

இன்று மாலை நான்கு மணிக்கு…

இன்று மாலை நான்கு மணிக்கு ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். எத்தனை மணி வரை இருப்பேன் என்பது உங்கள் கையில். பா. ராகவனும், அராத்துவும் கூட வருகிறார்கள் என்பதால் கிலி அடிக்கிறது. அ. மார்க்ஸ் நாளை தான் வருகிறார். கவலை இல்லை. பாரா, அராத்து என்ற இளவட்டங்களிடம் நாலு கையெழுத்து என்றால் என்னிடம் ஒரு கையெழுத்து வாங்க வேண்டும். இல்லையென்றால், எஸ்.ரா. ஸ்டாலுக்குப் போய் விடுவேன். நான் அனுபவசாலி என்பதால் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. உயிர்மையில் என் … Read more

கருப்பட்டி உருண்டைகளும் எலந்தவடையும்…

நேற்று என் நண்பர் ராமசுப்ரமணியன் கருப்பட்டியால் செய்த பலவித உருண்டைகளை டன்ஸோ மூலம் அனுப்பியிருந்தார்.  அவருக்கு என் நன்றியும் அன்பும் ஆசீர்வாதமும்.  இவருக்குத்தான் நிலவு தேயாத தேசம் நூலை சமர்ப்பணம் செய்திருந்தேன்.  அந்த உருண்டைகளைப் போல் என் வாழ்நாளில் சாப்பிட்டதில்லை.  அவ்வளவு ருசி.  நேற்றே தீர்ந்து விட்டது.  நாளை வரும் போது ஒண்ணு ரெண்டு கிலோவை அள்ளிக் கொண்டு வர வேண்டியதுதான்.  அதுசரி, இந்த ஆண்டு என்ன, எலந்த வடை பேச்சே இல்லையே? ஆனால் என் சிஷ்யை … Read more

ஒரே நாளில் எழெட்டு தடவை…

நேற்று போய் கோவிட்ஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்ட போது நர்ஸ் சொன்னார், இருபத்து நான்கு மணி நேரம் ஜுரம் இருக்கும், அதனால் பாரசிட்டமால் போட்டுக் கொள்ளுங்கள் என்று.  இது எனக்கு முன்பே தெரியும் என்பதால் வீட்டில் ரெண்டு பேருமே படுத்துக் கொண்டால் வீட்டுப் பூனையான லக்கியும் நானும் பட்டினி கிடக்க நேரும் என்பதை முன்கூட்டியே உணர்ந்துதான் அவந்திகாவிடம் ஒருத்தர் ஒருத்தராகப் போட்டுக் கொள்வோம், நான் போட்ட அடுத்த வாரம் நீ போட்டுக் கொள்ளலாம் என்றேன்.  ஆனால் கணவன் … Read more

புத்தக விழாவுக்கு வருகிறேன்…

இன்று காலை பதினோரு மணிக்கு என் வீட்டுக்கு எதிரே உள்ள (அப்பு இரண்டாவது தெரு) ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிஃபீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். போட்டதிலிருந்து ரெண்டு பெக் ரெமி மார்ட்டின் போட்டது போல் இருக்கிறது. போட்டது வந்தது எல்லாம் கதை போல் நடந்தது என்பதால் குமுதத்தில் எழுதலாம் என்று இருக்கிறேன். தடுப்பூசி போட்டு விட்டதால் என் கண்காணிப்பாளர் எனக்கு புத்தக விழா செல்ல அனுமதி அளித்து விட்டார். சனிக்கிழமை மாலை நாலு மணிக்கு ஸீரோ டிகிரி … Read more