தமிழின் முதல் subaltern நாவல்

உப்பு நாய்களைப் பற்றி நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.  சாத்தானையோ கடவுளையோ நேருக்கு நேர் சந்தித்து மீண்டது போன்ற அனுபவத்தைக் கொடுத்த நாவல் உப்பு நாய்கள்.  இந்த நாவல்தான் தமிழில் எழுதப்பட்ட முதல் ஸபால்டர்ன் நாவல் என்று தோன்றியது.  உடனே கட்டுரையை எழுதி விடலாம்.  ஆனால் இப்போது ஜெயமோகனின் காடு நாவலை படிக்கத் துவங்கியிருக்கிறேன்.  முடித்ததும் உப்பு நாய்கள் பற்றிய கட்டுரை வரும்.   காடு நாவலுக்கு எம். வேதசகாயகுமார் எழுதியுள்ள முன்னுரையின் மூலம் எனக்குப் பல தெளிவுகள் … Read more

படித்ததில் பிடித்தது…

என் கட்டுரை ஒன்றில் அந்த நாளைய தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன் பற்றிக் குறிப்பிட்டிருப்பேன்.   கணினி வசதியெல்லாம் இல்லாத அந்தக் காலத்தில் உலக சரித்திரம், பூகோளம், நாட்டு நடப்பு போன்ற விஷயங்களை எனக்குக் கற்பித்த ஆசான் அவர்.  ஆனால் இப்போது கணினி வந்த பிறகு எல்லாமே விரல் நுனியில் வந்து விட்டது.   ஒரு சினிமா விமர்சனம் எழுதலாம் என்று திட்டமிட்டால் கூட நாம் எழுத நினைத்ததை விட நல்ல விமர்சனம் இணையத்தில் வந்து விடுகிறது.  இந்த நிலையில் … Read more

உலகத் தரமான ஒரு படைப்பு…

லக்‌ஷ்மி சரவணகுமாரின் உப்பு நாய்கள் என்ற நாவலை சற்று முன்னர்தான் படித்து முடித்தேன்.  இப்படி ஒரு வாசிப்பை இரண்டே இரண்டு எழுத்தாளர்கள் மட்டுமே எனக்கு வழங்கியிருக்கிறார்கள்.  ஒருவர், மரியோ பர்கஸ் யோசா (Mario Vargas Llosa), இன்னொருத்தர் தருண் தேஜ்பால்.  லக்‌ஷ்மி சரவணகுமார் மூன்றாவது நபர். ஓரான் பாமுக் நோபல் வாங்குவார் என்று எழுதினேன்.  வாங்கினார்.  யோசா நோபல் வாங்குவார் என்று எழுதினேன்.  வாங்கினார்.  இப்போது இந்தியாவிலிருந்து தருண் வாங்கலாம்.  லக்‌ஷ்மி சரவணகுமாரின் உப்பு நாய்களும் கானகனும் … Read more

publicity stunt!!!

Hello Sir, Just read your article about writer Sujatha shouting at you and MD Muthukumaraswami.Now Mr.Muthukumaraswami has clarified in his status as below: நான் எனக்கே தெரியாமல் எழுத்தாளர் சுஜாதாவை இருபது வருடங்களுக்கு முன்பு நண்பர் சாரு நிவேதிதாவோடு போய் பார்த்தேன் என்று அவர் எழுதியிருக்கும் பதிவில் இருந்து தெரிந்துகொண்டேன். சாரு நிவேதிதாவின் கட்டுரைத் தொகுப்பு ‘கனவுகளை மொழிபெயர்த்தவன்’ பக்கம் 67-இல் சாரு சுஜாதாவை சென்று சந்தித்த சம்பவம் … Read more

வள்ளலாரின் வீச்சரிவாள்

நடந்து இருபது ஆண்டுகள் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.  கணையாழியில் ஆண்டு தோறும் நடக்கும் தி. ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் நான் எழுதிய நினைவுகளின் புதர்ச் சரிவுகளிலிருந்து என்ற குறுநாவல் பரிசு பெற்றிருந்தது.  (அந்தக் குறுநாவல் தான் இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் நாவலின் அடிப்படை.)  அதைப் படித்த சுஜாதா, “சாரு நிவேதிதா என்ற பெயரில் வேறு ஒரு புதிய நபர் எழுதிய கதையோ?” என்று கேட்டதாக கஸ்தூரி ரங்கன் என்னிடம் சொன்னார்.  ஏனென்றால், நான் அப்போது … Read more

பேரன்பின் தரிசனம் (2)

மரம் அறுக்கிற சத்தம் அவன் நடந்த வழியெங்கும் கேட்டபடியே இருக்க, முன்பு ஒன்றிரண்டு பேர் வந்து மரம் வெட்டி எடுத்துப் போனது போய் இப்போது கூட்டமாக வந்து விட்டார்களே என நினைத்தான்.  இந்த மரங்களை எல்லாம் வெட்டி எடுத்து மலைக்கு அந்தப் பக்கம் மலையாளத்தானிடம் விற்றுத் தீர்ப்பதில் மரம் வெட்டுபவர்கள் வெறித்தனமாய் இருந்தனர்.  பாதையை விட்டு மெதுவாக மரம் வெட்டும் சத்தம் கேட்ட திசை நோக்கி நடந்தான்.  சத்தம் நெருங்கி வர, அச்சத்தில் மரங்களில் கூடு கட்டியிருந்த … Read more