NH 10 – சாரு: மதுரை ஆசைத்தம்பி

மதுரை ஆசைத்தம்பி எழுதியது: சாருவை நீங்கள் பெண்ணாகப் பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் நான் பார்த்தேன். தான் மாறியதோடு நில்லாமல் உங்களையும் ஒரு பெண்ணாக மாற்றி இருப்பார். எங்கே? எப்படி? என்று எழும் வினாக்களுக்கான விடை ஒரு சிறிய கட்டுரையில் உள்ளது. அந்தக் கட்டுரை பெயர். NH -10. பெண்களின் வலிகளை வரிகளாக வரைந்திருக்கும் அந்தக் கட்டுரை சாருநிவேதிதாவின் நாடோடியின் நாட்குறிப்புகள் என்ற புத்தகத்தின் இரண்டாம் கட்டுரை. எழுத்தாளர்களுக்கு சாதி மதம், இனம், தேசம் குடும்பம் என்ற … Read more

சும்மா கிடந்த சங்கு

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல சீனி ஒரு கதையை அனுப்பிப் படித்துப் பார்க்கச் சொன்னார். சு. வேணுகோபால் எழுதிய உள்ளிருந்து உடற்றும் பசி என்ற கதை. எல்லோராலும் சிலாகிக்கப்பட்ட அந்தக் கதையைப் படித்தேன். கோவில் வாசலில் தன் சீழ் வடியும் புண்ணைக் காண்பித்துப் பிச்சையெடுக்கும் காட்சிதான் நினைவு வந்தது. கதை அத்தனை அருவருப்பு. கடைசி வாக்கியத்தில் வரும் இன்செஸ்ட் அல்ல; அதில் வரும் ஜவுளிக்கடை வர்ணணை. ஞாபக சக்தி உள்ள ஒரு ஒம்பதாம் கிளாஸ் … Read more

எனக்கு உயிராபத்து

நான் இலங்கைக்கு வந்ததிலிருந்தே என்னை நக்கல் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்னை இலங்கைக்கு வரவழைத்த றியாஸ் குரானா.  நேற்று அவர் என்னைச் சந்தித்தபோது எனக்கு உயிராபத்து இல்லை.  இன்றுதான் வந்தது.  அதுவும் றியாஸின் நண்பர் அனுப்பிய வாய்ஸ் மெஸேஜ்.  அவருக்கும் உயிராபத்து.  மிகவும் நடுக்கத்துடனும் பதற்றத்துடனும் அவர் எனக்கு அந்த வாய்ஸ் மெஸேஜை அனுப்பியிருந்தார்.  அதைப் பார்த்து விட்டுத்தான் இங்கேயிருந்து தப்பி விடலாம் என்று முடிவு செய்தேன்.  இங்கே அனாதையாக செத்தால் என்ன செய்வது என்று எழுதியிருந்தேன் அல்லவா?  … Read more

கொழும்பு பயணம்

இங்கே பாசிக்குடாவில் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிகிறது. இங்கே இருந்து கொண்டு எழுதுவது சாத்தியம் இல்லை. ஏனென்றால், இவர்களின் அவதூறுகளுக்கு நான் பதில் எழுதவில்லை. எழுதினால் தலை என்னிடம் இருக்காது. அதனால் கொழும்பு கிளம்புகிறேன். என்னை நேரில் வந்து பார்த்து ஆதரவு தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி. ஒரு பெண் கூட வந்து ஆதரவு தருவதாகச் சொன்னார். துரதிருஷ்டவசமாக அவர் பெயரை மறந்து போனேன். கொழும்புவில் மூன்று நாள் இருப்பேன். என்னை அழைத்த நண்பர்களுக்குப் … Read more

நான் யார்?

நான் யார் என்று தெரியாத சிலர் றியாஸ் குரானா என்னை ஏறாவூருக்கு அழைத்தது பற்றி அவருக்கு உளவியல் நெருக்கடி கொடுப்பதை ஃபேஸ்புக் மூலம் அறிந்தேன்.  நான் ஒன்றும் நீயா நானா கோபிநாத் போலவோ திண்டுக்கல் லியோனி போலவோ இங்கே இலங்கை வரவில்லை.  நான் வந்து கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஆயிற்று.  இதுவரை ஆன செலவு பூராவும் என்னுடையது.  இப்போது இங்கே பாசிக்குடாவில் தங்கியிருக்கும் செலவும் என்னுடையதுதான்.  என் வாசகர்களிடம் நான் பெற்ற சன்மானத்தினால் மட்டுமே இது எனக்கு … Read more

தனிமனித சுதந்திரம்

முத்து என்று எனக்கு ஒரு நண்பர் இருந்தார்.  மிகவும் நெருக்கமான நண்பர்.  நான் சந்தித்த மனிதர்களிலேயே மிகச் சிறந்த படிப்பாளி என்றால் அவர்தான்.  எனக்கு அறிவின் மீது தீராக் காதல் என்பதால் அவரை எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.  ஆனால் நட்பு என்றால் அது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும்.  அவருக்கு என் எழுத்தின் மீது துளியும் மரியாதை இல்லை என்பதை நீண்ட காலம் கடந்து கண்டு கொண்டு அவரிடமிருந்து விலகி விட்டேன்.  அது எனக்கு மிகப் … Read more