ஜனவரி 9

யாரையும் வேலை நாளில் வறுத்து எடுக்க இனியும் விருப்பம் இல்லை.  சாவகாசமாக சனிக்கிழமையே வரலாம்.  ஜனவரி ஒன்பது அன்று என்னுடைய பத்துப் பனிரண்டு புத்தகங்கள் வெளியாகும்.  வாசகர் வட்ட நண்பர்களின் ஆறு ஏழு புத்தகங்கள் வெளியாகும். சென்ற ஆண்டு தருண் தேஜ்பாலைப் போல் இந்த ஆண்டு மனுஷ்ய புத்திரனை அழைக்கலாம் என்று இருக்கிறேன்.  நேரில் போய் தான் அழைக்க வேண்டும்.    நட்சத்திரப் பேச்சாளர் என்பதால் இப்போதே ‘புக்’ பண்ணி விட வேண்டும் இல்லையா? அரங்கம் பற்றிய … Read more

கிரிமினல்களுக்கு இடையே…

ஒருவர் அல்ல, பல கிரிமினல்களுக்கு இடையே வாழ வேண்டியிருக்கிறது.  வாழ என்பதை எழுத என்று வாசித்துக் கொள்ளவும்.  எனக்கு எழுத்து தான் வாழ்க்கை என்பதால்.  சாருஆன்லைனில் பல கிரிமினல்கள் உள்ளே புகுந்து என்னென்னவே ஆபாச வேலைகளைச் செய்து வருகின்றனர்.  மொத்தம் பத்தாயிரம் பின்னூட்டங்கள் உள்ளன.  எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக நீக்குவது கடினம்.  தொழில்நுட்ப வேலை நடந்து வருகிறது.  வாசகர்கள் பொறுத்துக் கொள்ளவும். அதேபோல் தினமணியில் எழுதி வரும் பழுப்பு நிறப் பக்கங்களிலும் பின்னூட்டம் என்ற பெயரில், நல்லவிதமான விமர்சனம் … Read more

ஓ காதல் கண்மணி (6)

டியர் சாரு…. ஓகே கண்மணி விமர்சனம் படித்தேன்.  படம் பார்த்து விட்டு நான் நினைத்ததை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்.  உங்களை தொடர்ந்து வாசித்து வருபவன் என்பதால் உங்களுடைய விமர்சனம் இப்படியே இருக்கும் என நினைத்தேன்; அப்படியே இருந்தது.  அருமை சாரு.  ஒரு திரைபடத்தை எப்படி அணுக வேண்டும் என்பதை உங்களிடம் இருந்து கற்றுவிட்டேன் என நம்புகிறேன். லவ் யு சாரு…. என்றும் அன்புடன், ஜக்கரியா. ஜக்கரியாவுக்கும் மற்ற நண்பர்களுக்கும் நன்றி.  இத்துடன் ஓ காதல் கண்மணி விவாதத்தை முடித்துக் … Read more

ஓ காதல் கண்மணி (5)

தமிழர்கள் அத்தனை பேரும் – ஆம், அத்தனை பேரும் – சினிமா அடிமைகளாக இருக்கிறோம் என்பதற்கு ஓ காதல் கண்மணி படத்துக்கு நான் எழுதிய மதிப்புரைக்கு வந்துள்ள நூற்றுக் கணக்கான கடிதங்களே சாட்சி சொல்லும்.   எந்த தேசத்திலும் இப்படி சினிமா பைத்தியம் பிடித்து அலைய மாட்டார்கள்.  பாராட்டாக இருந்தாலும் சரி, திட்டாக இருந்தாலும் சரி, எட்டுக் கோடி தமிழர்களும் ஒரு படத்தைப் பார்த்து அபிப்பிராயம் சொல்லி விடுகிறார்கள்.  அவமானம்.  எஸ். ராமகிருஷ்ணனின் சஞ்சாரி நாவல் வந்துள்ளது. … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் : அரு. ராமநாதன் (2)

தினமணி இணைய இதழில் நான் எழுதி வரும் பழுப்பு நிறப் பக்கங்கள் தொடரைப் படித்து வருவீர்கள் என்றே நம்புகிறேன்.  சென்ற வாரம் அரு. ராமநாதன் பற்றி எழுதியிருந்தேன்.  அதன் தொடர்ச்சி சென்ற ஞாயிறு அன்று வந்திருந்தது.  அதன் இணைப்பு: http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/06/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81.-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D–%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2/article2864654.ece

கார்னிவல்

சில மாதங்களில் தென்னமெரிக்கா செல்லக் கூடும்..  ரியோ கார்னிவல் மீது எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை.  பயம் தான் காரணம்.  அவ்வளவு பெரிய மனிதப் பிரளயத்தில் சிக்கி மீண்டு வர முடியுமா?  இப்படி யோசித்தபடி தேடியதில் இந்த கார்னிவல் மாட்டியது.  இதில் கலந்து கொள்ளல்லாம் என்று தோன்றுகிறது… https://www.youtube.com/watch?v=1lzXxiBeRhI