Search Results for: blog
படச்சுருள் இரண்டாமாண்டு தொடக்க விழா
படச்சுருள் இரண்டாமாண்டு தொடக்க விழா, 10-07-2016, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. பியூர் சினிமா அலுவலக மாடியில், 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி. வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில். சிறப்பு அழைப்பாளர்கள்: எழுத்தாளர் சாரு நிவேதிதா இயக்குனர் வஸந்த் இயக்குனர் ஜனநாதன் இயக்குனர் மிஷ்கின் இயக்குனர் பா. ரஞ்சித் நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் மாத இதழான படச்சுருள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக முதலாம் ஆண்டை நிறைவு … Read more
குறுங்கதை : மாரத்தானும் புத்தக விழாவும் : பிரபு காளிதாஸ்
நேற்று 11.6.16 மாலை புத்தக விழா பின்புறம் ஓடும் சாக்கடையைத் தாண்டி இருக்கும் பார்க்கிங்கில் ஒரு இரண்டாயிரம் கார்கள் மேல் நின்றது. டூவீலர்கள் கண்ணிலேயே சிக்கவில்லை. பொதுவாக மிடில் க்ளாஸ்தானே நிறைய வருவார்கள், பணக்காரர்களும் படிக்க ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டார்களோ என்று சந்தேகம் வந்ததற்குக் காரணம், அங்கே நின்ற கார்கள் எல்லாமே லக்ஸுரி மாடல்கள். ஒவ்வொரு காரிலும் விலை உயர்ந்த சைக்கிள்கள் இரண்டு மூன்றை, சினிமாவில் ராஜ்கிரண் தூக்கி அடிப்பார் அல்லவா? அதே ஸ்டைலில் காரின் … Read more
புத்தகம் பேசுது : பிரபு காளிதாஸ் நேர்காணல்
இத்தனை வயதில் (63) என் பெயரை பொதுவெளியில் ஒரே ஒருவர் தான் சொல்லியிருக்கிறார். அவர் ஷோபா சக்தி. இன்னொரு தடவை மனுஷ்ய புத்திரன் தனக்குப் பிடித்த நூல்கள் என்று எக்ஸைலையும் சொல்லியிருந்தார். (அவருக்கு போதையே ஏறாதே? என்னவோ தெரியவில்லை, சொல்லி விட்டார்.) இது தவிர வேறு எந்த ஆத்மாவும் என் பெயரைச் சொன்னதேயில்லை. இலக்கிய டெலிஃபோன் டைரக்டரியில் கூட சா என்று ஆரம்பிக்கும் பெயர்களில் சாவன்னா இருக்காது. ஆனால் இப்போதெல்லாம் மூன்று வயதுக் குழந்தை விராத் கோலியின் … Read more
இறைவி விமர்சனம் முழுமையாக…
இறைவிக்கு இதற்கு முன்பு எழுதிய விமர்சனம்: http://charuonline.com/blog/?p=4569 கார்த்திக் சுப்பராஜின் ’ஜிகிர்தண்டா’ வித்தியாசமான கமர்ஷியல் சினிமாவாக இருந்ததால் ’இறைவி’ வெளிவந்த முதல்நாளே போய்ப் பார்த்தேன். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கை காலைக் கட்டி செப்டிக் டாங்க்கில் போட்டு விட்டது போல் இருந்தது. இது ஒரு மோசமான படம் என்றால் கூட வெறுமனே கடந்து போய் விடலாம். ஆனால் தமிழ்நாட்டுக் கலாச்சார அவலத்தின் குறியீடாக, மதிப்பீடுகளின் வீழ்ச்சியின் அடையாளமாக விளங்குகிறது ’இறைவி’. அருள் (எஸ்.ஜே. சூர்யா) ஒரு சினிமா … Read more
ஆயா
சாரு நிவேதிதாவின் ‘அவ்வா’ சிறுகதையைத் தழுவி மகா விதுரன் எடுத்த ‘ஆயா’ என்ற குறும்படம் சென்ற வருடம் பாலு மகேந்திரா விருது பெற்றது. இப்பொழுது YouTube-இல் காணக் கிடைக்கிறது. அவ்வா சிறுகதையைப் படிக்க: http://azhiyasudargal.blogspot.in/2011/09/blog-post_07.html – ஸ்ரீராம்