ஆலயம்
பவா செல்லதுரைபாஸ்டன் வந்திருப்பதாகஅங்கே வசிக்கும் வளன்சொன்னான் மறுநாள்பவா பேசினார்வளன் பாதிரியாகஊழியம் செய்யும்ஆலயத்துக்கு அழைத்துச்சென்றானாம்ஒவ்வொரு இடமாகக் காண்பித்தவன்ஒரு அறையில் நின்றான்Sacristy என்றார் பவாபிற்பாடு அகராதியில்பார்த்து பாதிரிகளின்ஒப்பனை அறையென அறிந்துகொண்டேன்பாதிரிகள் அணியும்பத்துப் பதினைந்து அங்கிகளில்ஒன்றை எடுத்துக் காண்பித்தான்அதில் வளனின் தாய் பெயரும்தந்தை பெயரும் அடுத்துஉங்கள் பெயரும் இருந்ததுபவா சொன்னபோதுஅவர் குரலிலிருந்த உணர்ச்சியைஎன்னால் இங்கே கொண்டுவரமுடியவில்லைவேறெந்தப் பெயரும் இல்லையாஎன்றேன்இன்னொரு பெயரும் இருந்ததுஅது ரகசியமென்றார் பவா