Marginal Man

தமிழில் எக்ஸைல் என்றுதான் தலைப்பு.  ஆனால் தஸ்லீமா நஸ்ரின் அவருடைய புதிய நாவலுக்கு எக்ஸைல் என்று பெயர் வைத்து விட்டதால் என் நாவலுக்கு வேறு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் விவேக் Marginal Man என்ற பெயரைச் சூட்டினார்.  விவேக்கை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  பிரபலமான ஆங்கிலப் பத்திரிகையாளர்.  டி.ஆர். விவேக்.  பிறகு தலைப்பை கொஞ்சம் நியூமராலஜி பிரகாரம் The Marginal Man என்று வைத்தேன்.  (நியூமராலஜியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதா … Read more

நிலவு தேயாத தேசம்

“ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சுகளையும் கண்ணீர்த் துளிகளையும் சிரிப்பின் அலைகளையும் வேட்கையின் கங்குகளையும் இசையையும் நாட்டியத்தையும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தன்னகத்தே வைத்துக்கொண்டு அந்தக் கதைகளைக் கேட்க வரும் யாரோ ஒருவனுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.” நிலவு தேயாத தேசம் நூலிலிருந்து… துருக்கி பயணக் கட்டுரையான நிலவு தேயாத தேசம் இன்று மாலை ஐந்து மணியிலிருந்து சென்னை புத்தக விழாவில் கிழக்கு பதிப்பக அரங்கத்தில் கிடைக்கும்.  இது சமீபத்தில்வெளிவந்துள்ள புதிய நூல்.  

ரெண்டு பேர்

எனக்கு இரண்டு ஸ்வீகார புத்திரர்கள்.  ரெண்டு பேர் மீதுமே எனக்குப் படு காட்டமான பொறாமை எப்போதுமே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் – நம்மால் முடியாததைச் செய்கிறான்களே என்று.  ரொம்ப முக்கியமான பொறாமை, முதல்வன் முகநூலில் போடும் போஸ்டுகளுக்கு அழகிகளும் பேரழகிகளும் உலகப் பேரழகிகளும் போட்டி போட்டுக் கொண்டு போடும் லைக்ஸ்.  அப்படி ஒவ்வொரு லைக் விழும் போதும் அடியேனுக்கு டிஸ்லைக் தான்.  எனக்குத் தெரிந்த அழகிகள், பேரழகிகளிடம் அவனுக்கு லைக் போடாதீர்கள் என்று கண்டித்தும் இருக்கிறேன்.  … Read more

புத்தக விழாவில் என் புத்தகங்கள்

என் வாசகர் வட்ட நண்பர்களில் உள்வட்டத்தைச் சேர்ந்தவர்களே சுமார் நூறு பேர் இருப்பார்கள்.  அவர்கள் சென்னை புத்தக விழாவுக்கு வரும் போது அவர்கள் கைகளில் என் புத்தகங்கள் இல்லை.  அந்த நண்பர்கள் வாங்கினாலே ஒரு டைட்டிலில் நூறு போய் விடும்.  நினைவூட்டுகிறேன்.  என் புத்தகங்கள் கீழ்க்காணும் புத்தக அரங்குகளில் கிடைக்கும். Emerald stall no 671 Aries stall no 667 Rhythm books stall no 435 Book affair stall no 411, 412 … Read more

என் புதிய புத்தகங்கள்

நிலவு தேயாத தேசம்* – சாரு நிவேதிதா துருக்கி பயணக் கட்டுரை “ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சுகளையும் கண்ணீர்த் துளிகளையும் சிரிப்பின் அலைகளையும் வேட்கையின் கங்குகளையும் இசையையும் நாட்டியத்தையும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தன்னகத்தே வைத்துக்கொண்டு அந்தக் கதைகளைக் கேட்க வரும் யாரோ ஒருவனுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன.” – நூலிலிருந்து… https://www.commonfolks.in/books/d/nilavu-theyaatha-desam *** To Byzantium: A Turkey Travelogue – Charu Nivedita – Rs.510 Every place is redolent with centuries-old … Read more

லே அவ்ட்

ஒரு பிரபல பத்திரிகையின் அட்டையில் ஒரு பிரபல நடிகரின் புகைப்படம் இருந்தது.  அவர் அணிந்திருந்த சட்டையில் மொத்தம் ஏழு பொத்தான்கள் இருந்தன.  பொதுவாக நாம் (ஆணும் பெண்ணும்) மேல் பொத்தானைப் போடுவதில்லை.  டை கட்டினால் மட்டும்தான் அதைப் போடுவது.  ஆகவே அதை விடுங்கள்.  அந்த நடிகரும் மேலே பொத்தான் போடவில்லை.  மெத்த சரி.  ஆனால் கீழேயிருந்து இரண்டாவது பொத்தானையும் போடவில்லை என்பதுதான் கோராமை.  அது மட்டும் டொய்ங் என்று வெற்றிடமாகத் தெரிகிறது.  இப்படி நாம் பல சமயங்களில் … Read more