எதைப் பெற்றோம்? எதைத் தருகிறோம்?

இது ஒரு நீண்ட கதை.  கதை என்ன கதை?  என் வாழ்க்கையில் நடப்பதுதான் கதை.  பொறுமையாகப் படியுங்கள்.  இதில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் ஏற்கனவே சொல்லப்பட்டதுதான்.  ஆனாலும் இங்கே அது எல்லாமே ஒரு தொகுப்பாகக் கோர்க்கப்பட்டிருக்கும்.  இதில் இப்போது சொல்லப் போகும் சம்பவங்கள் இனி வரப் போகும் கதையிலோ நாவலிலோ வந்தால், இது சாரு ஏற்கனவே அவர் ப்ளாகில் எழுதியதுதானே என்று சொல்லாதீர்கள்.  ப்ளாகில் நான்தானே எழுதுகிறேன், என் ஆவியா எழுதுகிறது? அதனால் ப்ளாகில் எழுதியதுதான் புத்தகமாகவும் … Read more

என்னையும் என் எழுத்தையும் புரிந்து கொள்ள ஒரு எளிய வழி…

சமீபத்தில் என் நண்பர் ஒரு புத்தகத்தைப் படிக்கச் சொன்னார். Loving and Hating Charles Bhukowski: A Memoir. எழுதியவர் ப்யூகோவ்ஸ்கியின் காதலி லிண்டா கிங். இந்தப் புத்தகத்தை நான் படிப்பதை விட என் வாசகர்களும் என் புதிய வாசகர்களும் படிப்பதுதான் சிறந்தது. ஏனென்றால், இந்தப் புத்தகம் மாதிரிதானே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்? நான் ஏன் இதைப் படிக்க வேண்டும்? இந்தப் புத்தகத்தில் ப்யூக் லிண்டாவுக்கு எழுதிய ஒரு கவிதை உள்ளது. அந்தக் கவிதையை உங்களுக்குத் தருகிறேன். … Read more

ஒளரங்ஸேப்பும் யூட்யூபும் – கண்காணிப்பின் அரசியல்

The Federal இதழில் சாருவின் கட்டுரை வெளியாகியுள்ளது. நண்பர்கள் படிக்கவும். https://thefederal.com/category/features/how-mughal-emperor-aurangzeb-is-being-silenced-in-the-new-india-112429

தில்லி பல்கலைக்கழகத்தின் கார்வா(ங்) குழுவுடன் ஒரு உரையாடல்

தில்லிப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை மாணவர்கள் கார்வா(ங்) என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி மாதந்தோறும் பல சிந்தனையாளர்களுடன், எழுத்தாளர்களுடன், சினிமாத்துறையில் சாதனை புரிந்தவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, அந்த அமைப்பில் உரையாடியவர்கள் ஷபானா ஆஸ்மி, சஷி தாரூர். கார்வா(ங்) அமைப்பின் முக்கியஸ்தர் ஈஷான் ஷர்மா என்ற வரலாற்றுத்துறை மாணவர். அவரும் நானும் என்னுடைய நாவல் Conversations with Aurangzeb: A Novel பற்றி போன வாரம் ஸூம் மூலம் ஒரு மணி நேரம் உரையாடினோம். அதற்கான இணைப்பை கீழே … Read more

கூல் சுரேஷும் மைக்கேல் ஜாக்ஸனும்…

பத்து ஆண்டுகளுக்கு முன்பு தில்லியில் உள்ள இண்டியா இண்டர்நேஷனல் செண்டர்.  அல்மோஸ்ட் ஐலண்ட் இலக்கிய நிறுவனம் நடத்தும் கருத்தரங்கு.  வங்கக் கவிஞர் ஜாய் கோஸ்வாமி வங்காள மொழியில் பேசுகிறார்.  அவர் பேசப் பேச அவர் பக்கத்தில் இருக்கும் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்.  மொழிபெயர்த்தவர் மேற்கு வங்கத்தில் கலெக்டராகப் பணி புரிகிறார் என்று பிறகு தெரிந்தது.  அந்த மொழிபெயர்ப்பாளர் எதையேனும் விட்டுவிட்டால் அதை எடுத்துக் கொடுக்க ஜாய் கோஸ்வாமி அருகிலேயே இன்னொருவர் அமர்ந்திருக்கிறார்.  ஜாயுடன் இன்னும் இருவர் வந்திருக்கிறார்கள்.  … Read more