அன்பும் சமாதானமும் பெருக…

நான் ஒருவரைப் புண்படுத்தி விட்டேன் என்று தெரிந்தால் அவரிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்டு விடுவேன்.  உங்களில் எத்தனை பேர் அப்படி இருக்கிறீர்கள்?  உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.  பலரிடம் அந்த குணம் இல்லாததை கவனித்திருக்கிறேன்.  நாம் செய்தது தவறு என்று தெரிந்தும் வருத்தம் தெரிவிக்காத பலரை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  வருத்தம் தெரிவித்தால் அந்தத் தவறின் பலு நம்மை விட்டு அகன்று விடும் என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.  இன்னொரு முறை இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்தத் தவறை செய்யாத … Read more

நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

Amazon மூலம் kindle edition ஆக ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள என்னுடைய சிறுகதைத் தொகுதி Morgue Keeper-இன் மொழிபெயர்ப்பு படு மோசம் என்பதாக ஒரு அன்பர் எழுதியிருக்கிறார்.  இதை நான் விமர்சனமாக, ஒரு அபிப்பிராயமாக எடுத்துக் கொள்ள முடியாது.  ஏனென்றால், morgue keeper கதை ப்ரீதம் சக்ரவர்த்தியால் மொழிபெயர்க்கப்பட்டு தெஹல்காவில் வெளிவந்தது.  அதுவும் தெஹல்காவின் சிறப்பு மலரில்.  மொழி நன்றாக இல்லாவிட்டால் தெஹல்காவில் வரும் சாத்தியம் இல்லை.  திர்லோக்புரி கதையும் ப்ரீதம் சக்ரவர்த்தியால்தான் மொழிபெயர்க்கப்பட்டது.  அவர்தான் ஸீரோ டிகிரியையும் … Read more

ஒரு நற்செய்தி

சில மாதங்களாகவே சாருஆன்லைனில் அவ்வளவு அதிகமாக நான் எழுதுவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.  இது சம்பந்தமாக கோபக் கடிதங்கள் அவ்வப்போது எனக்கு வருவதுண்டு.  அராத்து, துரோகி போன்ற நண்பர்கள் கூட நேரில் இது பற்றி திட்டுவதுண்டு.  பதிலுக்கு சிரிப்பதோடு சரி.  நான் அமைதியாக இருக்கிறேன் என்றால் ராப்பகலாக வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்று பொருள். இரண்டு தினங்களாக வாக்கிங் கூட போகாமல் – புயல் அடித்த தினங்களில் கூட வாக்கிங்கை நிறுத்தியதில்லை – கோணல் பக்கங்கள் நூலை … Read more

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் & எக்ஸைல்

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற என்னுடைய முதல் நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு  கலா கௌமுதி என்ற பத்திரிகையில் தொடராக வந்து கொண்டிருக்கிறது.  கலா கௌமுதி மலையாளத்தின் புகழ்பெற்ற இலக்கியப் பத்திரிகை.  இது ஒரு வாரப் பத்திரிகை என்பதும் நம் கவனத்துக்குரிய விஷயம்.  மேலும், இதன் ஸர்க்குலேஷன் ஒரு லட்சம் என்பதிலிருந்து மலையாளிகளின் இலக்கிய வாசிப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். கலா கௌமுதியில் நான் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.   ராஸ லீலா நாவலே … Read more