வயது

பல விஷயங்களில் நான் ஒரு ஐரோப்பியனைப் போல் யோசிப்பவன், வாழ்பவன் என்று சொன்னால் அது அவ்வளவாக யாருக்கும் புரிவதில்லை. சமயங்களில் என் மீது உண்மையான அக்கறையினால் சிலர் காட்டும் அன்பே எனக்கு வன்முறை போல் தோன்றுவதற்குக் காரணமும் இதுதான். “சாருவுக்கு வயசாய்டுச்சு, அவரை ரொம்பத் தொந்தரவு பண்ணாதீங்கப்பா” என்று யாரும் உண்மையான அக்கறையுடன் சொன்னால் எனக்கு அது என் மீது செலுத்தப்படும் உச்சக்கட்ட வன்முறை. கீழே உள்ள புகைப்படத்தையும் வசனத்தையும் பாருங்கள். நான் சொல்ல வருவது புரியும். … Read more

எனக்கு இசை

சற்று நேரம் முன்புதான் ஔரங்கசீப் 81-ஆவது அத்தியாயம் எழுதி முடித்தேன்.  பத்துப் பன்னிரண்டு மணி நேர ஆழ்நிலை தியானத்திலிருந்து பிரக்ஞை பெற்று எழுந்தது போல் இருந்தது. பற்களின் ஈறுகளில் கூட மின்னணு பாய்வது போல் இருந்தது.  எட்டு ஒன்பது பெக் ரெமி மார்ட்டின் அருந்திய பிறகு ஒரு இழுப்பு மரியுவானாவை இழுத்தது போல் ஒரு மிதப்பு.  வார்த்தைகளால் விளக்க முடியவில்லை.  நாற்காலியில் அமர்ந்திருப்பதையே உணர முடியவில்லை.  அந்தரத்தில் மிதப்பது போல் இருந்தது.  இந்த உணர்வினால்தான் – இந்த … Read more

என்னுடைய புத்தகங்கள்

என்னுடைய நேரம் அவ்வளவையும் புனைவெழுத்துக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.  அதன் காரணமாக, எனக்கு வரும் கடிதங்களை தளத்தில் வெளியிட்டு பதில் எழுதுவதை நிறுத்தி வைத்திருக்கிறேன்.  ஆனால் கடிதம் எழுதுபவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் பதில் எழுதி விடுகிறேன்.  நெருங்கிய நண்பர்களாக இருந்தால் போனில் வாய்ஸ் மெஸேஜோடு சரி.  நேற்று கூட இரவு பதினோரு மணிக்குப் படுத்து நான்கு மணிக்கு எழுந்து ஔரங்கசீப்பில் மூழ்கினேன்.  ஔரங்கசீப்பை முடித்தாலும் நிலைமை இப்படித்தான் இருக்கும்.  முக்கால்வாசி முடித்து வைத்த … Read more

அன்பு என்றால் என்ன? அப்படி ஒன்று இருக்கிறதா?

சாரு, இப்போதுதான் உங்களுடைய சாய் வித் சித்ராவில் பார்க்காமல் விடுபட்ட பாகங்களைப் பார்த்து முடித்தேன். உங்கள் பேட்டியில் மற்றவர்கள்மீது உள்ள அன்பினால் செய்வதாக வெவ்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளின் பின்புலத்தில் சொல்லியிருந்தீர்கள். எனக்கு அன்பு என்றால் என்னவென்றே புரிவதில்லை, புரிந்துகொள்ளவும் முடிவதில்லை. பொதுவாகக் கேட்கிறேன், அது நிஜமான ஒன்றா? -ப்ரஸன்னா  ப்ரஸன்னா, தலைக்கு மேல் வெள்ளம் என்ற நிலையில் ஔரங்கசீப்பை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  என்னால் மற்ற எழுத்தாளர்களைப் போல் இரவில் கண் விழிக்க முடிவதில்லை.  ஒருநாள் மாலை … Read more

இன்று க்ளப்ஹவுஸில் ஃபாத்திமா பாபு

இன்று (ஞாயிற்றுக் கிழமை) இரவு 8.50 மணிக்கு ஃபாத்திமா பாபு என்னுடைய ‘வெளியிலிருந்து வந்தவன்’ என்ற சிறுகதையை க்ளப்ஹவுஸில் வாசிக்கிறார். நானும் கலந்து கொள்கிறேன். முடிந்தவர்கள் கலந்து கொள்ளலாம். லிங்க் கீழே. https://www.clubhouse.com/join/%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE/WanFmsBv/Md3woJd5