அவதூறுக்கு ஒரு எதிர்வினை (1)

ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் ராம்ஜி நரசிம்மன்: ஒரு பதிப்பகத்தின் ஜீவனே எழுத்தாளன்தான். நாம் பதிப்பிக்கும் எழுத்தாளர்கள் என்று இல்லாமல் ஒட்டுமொத்த எழுத்தாளர்கள் அனைவரையும் மதிக்க வேண்டியது எந்த ஒரு பதிப்பகத்தின் கடமை என்று நினைக்கிறேன். மிஷ்கினிடம் வேலை பார்த்த அசோசியேட் டைரக்டர் அந்த கேரக்டர் சாருவை வைத்துதான் படத்தில் அமைத்தோம் என்று சொல்வதே பொய் என்றுதான் நினைக்கிறேன். ஒருவேளை அது உண்மையாகவே இருந்தாலும், உங்களை நம்பி ஒரு வார்த்தை பேசியவரின் கருத்துக்களை இப்படி வெளியே பேசுவது அநாகரிகத்தின் … Read more

அவதூறு

அன்புள்ள கோகுல், “பிசாசு” படத்தில் வருகிற அந்த “ஹண்ட்ரட் பக்ஸ் இருக்குமா புரோ” பாத்திரத்தை நான் என்றுமே ரசித்ததில்லை. ஏன் தெரியுமா? அது சாருவை குறிப்பதால் அல்ல. நான் ஆரம்பத்தில் இருந்தே அது மிஷ்கின் தன்னிடம் ஓசியில் வாங்கிக் குடித்த அல்லது அவரை நம்பி அவரிடம் நட்பாகப் பழகின சிறுபத்திரிகையாளர்களையும்., இலக்கியவாதிகளையும் ஒட்டுமொத்தமாக அவமதிக்கும் நோக்கில் படைத்த ஒரு பகடிப் பாத்திரமாகவே கண்டேன். நீங்கள் இப்போது கமல் vs ரஜினி crossfireஇல் சாருவின் மீது சேற்றை வாரி … Read more

தாடி

இன்றைய நிலையில் எல்லா எழுத்தாளர்களின் – அல்லது பல எழுத்தாளர்களின் எண்ணம், ஜெயமோகனை விட அதிகம் எழுதி விட வேண்டும் என்பது.  எனக்கு அந்த எண்ணமெல்லாம் கிடையாது.  என்னுடைய ஒரே தலைவன் பெருமாள் முருகன்தான்.   அந்தத் தலைவன் புக்கரை அடைவதற்குள் நாம் அந்தப் பக்கம் தலைகாட்டி விட வேண்டும். ஆனால் இடையிடையே ஜெயமோகனின் எண்ணமும் வரும்.  பக்க எண்ணிக்கை பற்றி அல்ல.  அவரது வாசகர் எண்ணிக்கை பற்றி.  உடனேயே ஜக்கியின் எண்ணம் வந்து அதை முழுங்கி விடும்.  … Read more

புனித அங்கியும் கொஞ்சம் பணமும்…

என்னுடைய பல வாசகர்களில் கிருஷ்ணனும் ஒருவர்.  உண்மைப் பெயர் வேறு.  உண்மையான பெயரை அனுமதி இல்லாமல் சொல்வதில்லை.  என்னைத் தீவிரமாக வாசிப்பவர்கள் எத்தனை பேர் என்று எனக்குத் தெரியாது.  அதைத் தெரிந்து கொள்ளவும் வழியில்லை.  நான்கு ஆண்டுகள் குமுதத்தில் எழுதியதால் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.  ஆனால் அவர்களுக்கெல்லாம் என்னுடைய நாவல்களோ மற்ற புத்தகங்களோ பரிச்சயமில்லை.  எல்லாம் ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்திருக்க வேண்டும்.  எனக்கு அறுபத்தெட்டில் ஆரம்பிக்கிறது.  கிருஷ்ணன் என் தீவிரமான வாசகர்களில் ஒருவர்.  வளன் அரசுவைப் … Read more

தலைப்பில்லாத குறுங்கதை: காயத்ரி ஆர்.

“பெஸ்ட் மாம்பழம் ஆஃப் த இயர்” என்று சப்புக் கொட்டிக்கொண்டு என் கணவர் சாப்பிடவும் ஆசையாக நானும் ஒரு துண்டு வாயில் போட்டுக் கொண்டபோதுதான் சனி இன்னும் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டிருந்தது உறுதியாயிற்று. எனக்கு அந்தத் துண்டில் ஆரஞ்சு வாசனை வந்தது. பெருங்காயத்தில் முட்டைக்கோஸ் வாசனை வந்தது. சாக்லேட்டில் தீய்ந்த வாசனை. எல்லா பதார்த்தங்களின் வாசனையும் வேறாகிப் போனது. எல்லோரிடமும் புலம்பிப் புலம்பி எனக்கு மாளவில்லை. எதையாவது சாப்பிட்டால் மாறும் என் முகபாவத்திற்காக சுற்றியிருப்பவர்கள் ஆர்வமாக … Read more