2021

2020 முடிய இன்னும் இருபத்து நான்கு மணி நேரம் இருக்கிறது.  இதுவரை எந்த ஆண்டும் புத்தாண்டு பற்றிப் பெரிதாக யோசித்ததில்லை.  எல்லா நாளும் ஒரே நாளே என்ற மனநிலையே எனக்கு.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்காட்டில் அராத்து புத்தக வெளியீட்டு விழா.  கோலாகலம்.  சென்ற ஆண்டு கிழக்குக் கடற்கரைச் சாலை.  அராத்து புத்தக வெளியீடு.  இந்த ஆண்டு புத்தக வெளியீடு இருந்தாலும் நான் வருவதற்கில்லை என்று சொல்லியிருந்தேன்.  இப்போது நண்பர்கள் ஏற்காட்டில் சந்திப்பதாக அறிந்தேன்.  எனக்கு மிக … Read more

an open letter to Sanjay Subrahmanyan

இந்த வார குமுதத்தில் நான் எழுதியுள்ள மேற்கண்ட கடிதம் கடும் விவாதங்களுக்கு உட்பட்டிருப்பதை அறிந்தேன். நான் சற்றும் எதிர்பார்த்திராதவர்களெல்லாம் எனக்கு போன் செய்து பேசினார்கள். கடும் சர்ச்சையையும் விவாதத்தையும் எழுப்பியுள்ள அந்தக் கடிதத்தை என் ப்ளாக் வாசகர்களும் படிக்க வேண்டும் என்று பிரியப்படுகிறேன். பொதுவாக பத்திரிகைகளில் நான் எழுதுவதை என் ப்ளாகில் மறுபிரசுரம் செய்வது என் வழக்கம் இல்லை. எனவே நீங்களே குமுதத்தை ஆன்லைனிலோ, உள்ளூர் நண்பர்கள் கடையிலோ வாங்கிப் படிக்கலாம். படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

188. ராம்ஜிக்கு ஒரு கடிதம்…

ஸீரோ டிகிரி பதிப்பக பார்ட்னரும் என் ஆருயிர் நண்பருமான ராம்ஜிக்கு, நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன் ராம்ஜி.  இதை நான் உங்களுக்கு ஒரு போன் போட்டுக் கூட சொல்லியிருக்கலாம்.  அப்படிச் சொன்னால் அதை நீங்கள் விளையாட்டாக எடுத்துக் கொண்டு விடுவீர்கள் என்பதால் இப்படி ஒரு பகிரங்கக் கடிதமாக எழுதத் துணிந்தேன்.  விஷயம் இதுதான்.  ரொம்ப சிம்பிள்.  ஆனால் ரொம்பக் கஷ்டம்.  நானும் நேர்வழியில் செல்ல எத்தனையோ முயற்சி பண்ணினேன்.  45 ஆண்டுகளாக முயற்சி பண்ணினேன்.  தெய்வத்தால் ஆகாது … Read more

Farewell, Damascus

Farewell, Damascus என்ற அருமையான நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். Ghada al-Samman எழுதியது. இதில் பல வாசகங்கள் நான் உணர்ந்ததைப் போலவே இருந்தன. இவர் என் நண்பரும் கூட. இந்த நாவல் அவருடைய இள வயது அனுபவங்களைச் சொல்வது. கிட்டத்தட்ட சுயசரிதை. அதில் ஒரு வாக்கியம்: The things you write shake people up, scare them. It isn’t that they hate you. In fact, what you say arouses their … Read more

186. இசையும் கொண்டாட்டமும்

பிறந்த நாள் கொண்டாட்டங்களின் ஹேங் ஓவர் நேற்று வரை நீடித்தது.  எல்லாம் ஓய்ந்தது என்று வேலையைத் தொடங்கிய போது சுநீல் கிருஷ்ணனின் வாழ்த்து வந்தது.  சுநீல் கிருஷ்ணன் போன்ற ஒரு முக்கியமான படைப்பாளியை இதுவரை தெரிந்து கொள்ளாமல் இருந்தது பற்றிய வருத்தத்துடன் சென்ற ஆண்டுதான் அவருடைய நூல்களை வாங்கி வந்தேன்.  எடுத்திருக்கும் வேலையை முடித்து விட்டு அவரை வாசிக்க வேண்டும்.  இடையில் அவருடைய தளத்தில் அவர் எழுதியிருக்கும் கட்டுரைகளை வாசித்தபோது எக்ஸைல் நாவலின் அடியோட்டமாக நான் தொட்டிருக்கும் … Read more

வித்தியாசமான நாள்

இந்த ஆண்டுப் பிறந்த நாள் மிக வித்தியாசமாகக் கடந்தது. வைன் இல்லாதபடி. நண்பர்களை virtual-ஆகப் பார்த்தபடி. வீட்டில் இருந்தபடியே. ஒருபோதும் இப்படி வீட்டிலேயே இருந்ததில்லை. எல்லாம் கொரோனா. என் சகா கிம் கி டுக்கும் போய் விட்ட பிறகு இன்னும் உஷாராக வேண்டி வந்து விட்டது. மார்ஷல் ஆர்ட்ஸ் வீரன். ப்ரூஸ்லீ மாதிரி இருப்பான். ஸ்ப்ரிங் ஸம்மர் படத்தின் அசகாயசூரன் கிம் கி டுக் தான் என்பது பலரும் அறியாதது. பலரும் அவனை இயக்குனர் என்றே அறிவர். … Read more