அர்விந்த் கெஜ்ரிவாலின் உரை / அடியேனின் தேர்தல் கணிப்பு

கெஜ்ரிவால் பற்றி என்னுடைய கருத்தை விரிவாக ந்யூஸ் சைரன் பத்திரிகையில் நான் எழுதியுள்ளதை நீங்கள் வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  ஊழல் தான் இன்றைய இந்தியாவின் தலையாய பிரச்சினை.  அதனால்தான் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 1947-க்குப் பிறகு நடந்த தேர்தல்களிலேயே மிக மிக மிக மிக மோசமான முறையில் மண்ணைக் கவ்வப் போகிறது என்று சொல்கிறேன்.  இந்தத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலக் கட்சியாகக் குறுகி விடும் என்பது என் கணிப்பு.  1999-ஆம் அண்டு … Read more

ஆப் கா காம் ஹே, பண்டிட் ஜி!

மிகப் பெரிய படிப்பாளியும், ஆய்வாளரும், கவிஞருமாகிய என் நண்பர் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.  இன்னொரு அவதூறும் செய்திருக்கிறார்.  அதாவது, தருணின் தயவு இருந்தால்தான் என் நாவலை ஆங்கிலத்தில் வெளியிட முடியும் என்பதால்தான் தருணை ஆதரித்து எழுதுகிறேனாம்.  படித்தவன் கெட்டவனாக இருந்தால் இப்படித்தான் யோசிக்கத் தோன்றும்.  ஏன்யா, என் புத்தகம் ஆங்கிலத்தில் வருவதற்காக இவ்வளவு பெரிய தியாகமா செய்வேன்?  தருணின் இரண்டு மகள்களும், மனைவியும், தருணின் வயதான அம்மாவும் இரண்டு மாதமாக கோவாவில் தங்கி, செவ்வாய்க் கிழமையும் வெள்ளிக்கிழமையும் கால் … Read more

மரமும் மனிதனும்…. எல்லே ராம்

மரங்களையும் பிராணிகளையும் நேசிப்பவர்களை நான் நேசிக்கிறேன்.  மனிதர்களோடு பழகுவதை விட மரங்களோடும் பிராணிகளோடும் பழகுவது மனதுக்கு இனிமை தருவதாக உள்ளது.  அதனாலேயே பாலு மகேந்திராவை எனக்கு அதிகம் பிடிக்கிறது.  அதனாலேயே தருணை எனக்கு அதிகம் பிடிக்கிறது.  மரங்களை நேசிக்க எனக்குக் கற்றுக் கொடுத்தவன் தருண்.  அவனுடைய ஆல்கெமி ஆஃப் டிஸையரைப் படித்தால் நீங்களும் மரங்களை நேசிக்கத் துவங்குவீர்கள்.  எல்லே ராம் என்றும், லாஸ் ஏஞ்ஜல்ஸ் ராம் என்றும் அழைக்கப்படும் என் அன்புக்குரிய ராம் முகநூலில் எழுதியுள்ள இந்தப் … Read more