காஃப்காவின் எழுத்தும் என் அன்றாட வாழ்வும்…

காஃப்காவின் எழுத்து எனக்குப் பிடிக்காது.  என் அன்றாட வாழ்வும் எனக்குப் பிடிக்காதது.  ஆனால் எனக்கு வேறு வழியில்லை.  இது என் மீது திணிக்கப்பட்டது.  இதிலிருந்து என்னால் விடுபட இயலாது.  எனக்குப் பிடித்தது போல் என் அன்றாட வாழ்வை அமைத்துக் கொள்வதற்கான வசதியும் வாய்ப்பும் எனக்கு இல்லை.  மார்க்கி தெ ஸாத் தன் வாழ்வின் பெரும் பகுதியை சிறையில் கழிக்க வேண்டியிருந்தது.  அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பு அவருக்கு இல்லை.  வான் காகின் வறுமையிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பு வான் காகுக்கு … Read more

ஒரு வதந்தியைப் பற்றி…

யோகா குரு சௌந்தர் என்னைப் பற்றி எழுதியிருக்கிறார்.  அதன் இணைப்பு :  https://barnasalai.blogspot.com/2025/11/blog-post_30.html?m=1&fbclid=IwY2xjawOaFYFleHRuA2FlbQIxMQBicmlkETFBNzJjMWpQMVdqbHc5Qk1rc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHlL7qdMvcIluHuAx84H9mSRXi0RojxUwy76163CDGmzEpjWYMzt71Ua7atRE_aem_eF1w2tRBHjg3CxcyTdnokw இந்தப் பதிவில் உள்ள ஒரு விஷயம் பற்றி இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது.  அதாவது, என்னோடு பழகும் நண்பர்கள் பற்றி நான் கொஞ்ச காலத்தில் திட்டி எழுதி விடுகிறேன்.  இப்படி ஒரு கருத்து பலரிடமும் இருக்கிறது.  இதற்கு நான் பல காலமாக பதிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  ஆனாலும், என் பதில் பற்றி யாருக்கும் கவலை இல்லை.  தாங்கள் சொல்வதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.  … Read more

echoes in the void

இன்று மாலை ஏழு மணியிலிருந்து ஒரு கவிதை எழுத ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில். தமிழில் எழுதினால் பிரச்சினை ஆகி விடுகிறது. தலைப்பு மேலே. அதன் கடைசிப் பத்தியைத் திரும்பத் திரும்ப எழுத வேண்டியிருந்தது. ஒன்று, வெளிப்படையாக இருந்தது. அது கவிதைக்கு அழகல்ல. இன்னொன்று, யாருக்கும் புரியாது. அதனால் இடைப்பட்ட நிலையில் அதை எழுதினேன். அதற்கே ஒரு மணி நேரம் ஆனது. கவிதையை சஞ்ஜனாவுக்கு அனுப்பியிருக்கிறேன். வந்ததும் இங்கே பதிவிடுவேன்.

ஐரோப்பிய சினிமா காணொலி

பாண்டிச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் நடந்த ஐரோப்பிய சினிமா அறிமுகப் பட்டறையின் காணொலி தயாராகி விட்டது. அதற்குரிய கட்டணம் அனுப்பியவர்களுக்கு என் நண்பர் ராஜா வெங்கடேஷ் காணொலியை அனுப்பிக்கொண்டிருக்கிறார். பணம் அனுப்பி காணொலி கிடைக்காதவர்கள் எனக்கு எழுதவும். charu.nivedita.india@gmail.com

லும்பன் சமூகம்: அராத்து

சாரு என்றாலே வம்புதான் என்ற கருத்து சமூகத்தில் பரவலாக நிலவி வருகிறது. அதாவது , அவருகிட்ட வச்சிக்கக்கூடாது, எதுக்கெடுத்தாலும் சண்ட போடுவாரு, திட்டிடுவாரு என்ற கருத்து சமூகத்தில் பலரிடமும் வேரூன்றி நிற்கிறது. ஆனால் சாரு, இதுவரைக்கும் நான் யார் வம்பு தும்புக்கும் போனதில்லை, மத்தவங்கதான் எங்கிட்ட வம்புக்கு வந்து சும்மா இருக்கும் என் சூத்தைக் கடிக்கிறார்கள் என்று கோபமாகச் சொல்கிறார். லலிதா ராம் என்பவர் எழுதியிருந்ததைப் பகிர்ந்து, அதற்கு பதிலளித்து நீண்ட கட்டுரை எழுதியிருந்தார் சாரு. அதனால் … Read more

தடுக்கி விழுந்தவனைப் பார்த்து கைதட்டி மகிழும் லும்பன்கள்!

டேய் அம்பி, நீ என்னை அண்ணாவாக பாவித்து என்னை “நீ” என விளித்திருப்பதால் நானும் உன்னை என் தம்பியாக பாவித்து டேய் என விளித்திருக்கிறேன். மற்றபடி உன்னை டேய் என்று திட்டி விட்டேன் என்று குதிக்காதே. பின்வரும் பதிவை செப்டம்பர் 30 அன்று எழுதியிருந்தேன்: ”இரண்டொரு தினங்களுக்கு முன் மகாபாரதக் கதையில் ஒரு பிழை விட்டேன். பெருந்தேவி சுட்டிக் காட்டி கடிதம் எழுதினார். திருத்திக் கொண்டேன். இப்போது அதைவிடப் பெரும் பிழை, ஸ்வர ராக ஸூதாரஸ கீர்த்தனையை … Read more