வாசகர் வட்ட சந்திப்பு

நாளை மாலை ஆறரை மணிக்கு வாசகர் வட்ட சந்திப்பு உள்ளது. இது நினைவூட்டல். கலந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஐடி நம்பர், பாஸ்கோட் அனுப்பி விட்டேன் என்று நினைக்கிறேன். விடுபட்டிருந்தால் எழுதவும். கலந்து கொள்ள விரும்பிய பல நண்பர்களை இணைத்துக் கொள்ள இயலவில்லை. ஒரே காரணம், அவர்களுடைய முதல் கடிதமே அதுவாகத்தான் இருக்கிறது. உங்களோடு எந்தப் பழக்கமும் இல்லாமல் எப்படி சந்திப்பில் இணைத்துக் கொள்வது? அரை மணி நேரத்துக்கு முன்னால் ஒரு ஃபோன். எடுத்தேன். வாசகர். முதல் போன். … Read more

தமிழ்நாடு அரசின் இலக்கிய விருதுகள் பற்றி ஜெயமோகன்

இந்த அறிவிப்புகளுக்குக் காரணமாக அமைந்த இரண்டு கடிதங்களை (முதல்வருக்கு நான் குமுதத்தில் எழுதியவை) என் தளத்தில் வெளியிட்டிருந்ததை ஜெயமோகன் படித்தாரா என்று தெரியவில்லை. படித்திருந்தால் அவருக்கு ஒரு சில விவரங்கள் தெரிந்திருக்கும். முதல் கடிதம் குமுதத்தில் வந்த உடனேயே – அதாவது மே 25-ஆம் தேதியே தமிழக முதல்வர் தலைமைச் செயலாளரிடம் இந்தக் கடிதம் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துவிட்டதாகத் தலைமைச் செயலாளர் திரு இறையன்பு ஐஏஎஸ் மூலமாக எனக்குத் தெரியவந்தது. இதை நான் குறிப்பிடலாமா என்று … Read more