குருவும் சிஷ்யையும்… (குறுங்கதை)

இந்த ஒன்றரை ஆண்டுகளில் நேற்றுதான் முதல் முதலாக அவந்திகா வெளியே செல்கிறாள்.  சின்மயா நகரில் உள்ள அவளுடைய அம்மா வீட்டுக்கு.  மைலாப்பூரிலிருந்து தூரம்தான்.  டாக்ஸியில் போக மாட்டேன் என்று சொல்லி விட்டதால் நண்பர்கள் யாருடைய காராவது தேவை.  காரோட்டியுடன்.  ஆள் ஔரங்கசீப் மாதிரி ஒழுக்கசீலராக இருக்க வேண்டும்.  தண்ணி கிண்ணி அடித்துக் கொண்டு, நிறைய கேர்ள் ஃப்ரென்ஸெல்லாம் வைத்துக் கொண்டிருந்தால் – வேண்டாம், பெயரைச் சொல்லாமலேயே யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும் – அந்த ஆள் … Read more