ஹெல்லோ…

சிலருக்கு இளைய ராஜாவைப் பார்த்தாலே உணர்ச்சி மிகுதியில் அழுகை வந்து விடும். சிலர் அவரைப் பற்றிப் பேசும்போதே அழுது விடுவார்கள். சிலர் அவரைப் பார்த்ததுமே காலில் விழுந்து விடுவார்கள். அவர்களின் ரத்த ஓட்டமாக இருப்பவர் இளைய ராஜா. எம்.எஸ். விஸ்வநாதனைப் பலருக்கும் பிடிக்கும். ஆனால் ராஜா அளவுக்கு யாரும் உணர்ச்சிவசப்பட்டு நான் பார்த்ததில்லை. நான் தமிழில் சிந்தித்து, தமிழில் பேசி, தமிழில் எழுதினாலும் அந்நியன். எனக்கு இந்த ராஜா மேட்டர் எல்லாம் புரிவதே இல்லை. அது எப்படி … Read more

சில கேள்விகளும் பதில்களும்…

சாரு, வணிக எழுத்தும் இலக்கியமும் படித்து மிகவும் வருத்தப்பட்டேன்.  ஏனென்றால், இதே பிரச்சினை பற்றி நீங்கள் குறைந்தது நூறு முறையாவது எழுதியிருப்பீர்கள்.  இன்னும் கூட இதை எழுதித்தான் புரிய வைக்க வேண்டியிருக்கிறது என்பது உண்மையிலேயே துரதிர்ஷ்டம்தான்.   இந்தச் சிறிய கட்டுரையைப் படிப்பவர்களுக்கு சில சந்தேகங்கள் எழலாம்.  அதையெல்லாம் கேள்விகளாகத் தொகுத்திருக்கிறேன்.  இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் எங்களுக்கு நேரிலேயே பலமுறை விளக்கியிருக்கிறீர்கள்.  இருந்தாலும் பலருக்கு இந்தச் சந்தேகங்கள் எழலாம் என்பதால் கேட்கிறேன். 1.நன்றி என்ற குணம் என்னிடம் … Read more

வணிக எழுத்தும் இலக்கியமும்

பிஞ்ஜ் செயலி இருந்திராவிட்டால் நான் ராஜேஷ்குமாரைப் படித்திருக்க மாட்டேன்.  கைபேசியில் ஒரு குறியீட்டை அழுத்தினால் ராஜேஷ்குமாரைப் படித்து விட முடிகிறது என்ற அருகாமைதான் காரணம்.  இல்லாவிட்டால் கிண்டிலில் கூடத் தேடிப் போய் படித்திருக்க மாட்டேன்தான்.  இலக்கியத் துறையில் இன்னமும் ஜீவித்திருக்கக் கூடிய ஒருசில தீவிரவாதிகளில் நானும் ஒருவன் என்பதால் கைபேசியில் கிடைத்தாலும் படிக்கக் கூடிய ஆள் இல்லை நான்.  ஆனாலும் படித்ததற்குக் காரணம், வணிக எழுத்தில் அந்தப் பெயர் ஒரு சூப்பர் ஸ்டார் ரேஞ்ஜில் புழங்கி வருவதுதான்.  … Read more