பெட்டியோ நாவல் தயார்

பெட்டியோ நாவலை எழுதி முடித்து விட்டேன். முதல் ட்ராஃப்ட்டில் 105 பக்கம். நான்கு நாள்களில் எழுதினேன். இத்தனை வேகத்தில் என் வாழ்வில் இதுவரை எழுதியதில்லை. ஸீரோ டிகிரியில் புழங்கிய மொழி நடை இனி எனக்கு லபிக்காது, அந்தக் காலம் வேறு, அப்போதிருந்த மனோலயம் வேறு என்றே நினைத்திருந்தேன். பெட்டியோ நாவலில் ஒரு முழு அத்தியாயம் ஸீரோ டிகிரியையும் விட கனமாக வந்திருக்கிறது. என் எழுத்து எளிமையாக இருக்கும் என்பது பொதுவான கருத்து. அந்த அத்தியாயம் மட்டும் வேறு … Read more

ஒரு புதிய நாவல்… என்.எஃப்.டி.யில்

மிக மும்முரமாக பெட்டியோ நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். நாளைக்குள் முடிக்க வேண்டும் என்பது திட்டம். இன்று மூன்றாவது நாள். நான்கு நாள்களில் ஒரு நாவல் எழுதியது இப்போதுதான். அன்பு நாவலை பத்து நாளில் எழுதினேன். ஆனால் அதில் ஒரு நாற்பது சதவிகிதம் இணைய தளத்தில் உள்ளது. இப்போதைய பெட்டியோ நாவலில் இரண்டு பக்கம் மட்டுமே தளத்தில் இருக்கிறது. மற்றவை அனைத்தும் புதியது. அராத்துவுக்கே தெரியாது. அனோஜன் மற்றும் ப்ரஷாந்த் இருவருக்கும் மட்டுமே தெரியும். அதிலும் சிலது அவர்களுக்கும் … Read more

இன்று மாலை ஃபேஸ்புக் லைவில்…

இன்று மாலை ஐந்து மணிக்கு ஃபேஸ்புக் லைவில் உரையாற்ற இருக்கிறேன். இன்று காலை பதினோரு மணியிலிருந்தே ஆரோவில்லில் சிறுகதைப் பட்டறை ஆரம்பிக்க இருக்கிறது. அதில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. பரோல் கிடைக்கவில்லை. அதனால்தான் ஐந்து மணிக்கு ஃபேஸ்புக் லைவில் பேசுகிறேன். ஜே.பி. சாணக்யாவின் ஆண்களின் படித்துறை, இராசேந்திர சோழனின் இசைவு, சு. வேணுகோபாலின் உள்ளிருந்து உடற்றும் பசி ஆகிய மூன்று சிறுகதைகள் பற்றிய பட்டறை. என் உரை இம்மூன்று சிறுகதைகள் பற்றியும் பொதுவாக எழுத்தும் பாலியலும் … Read more

ஒரு உச்சரிப்பு விளக்கம்

பேடியோ என்பதன் சரியான உச்சரிப்பு ஆங்கிலத்தில் cat, apple போன்ற வார்த்தைகளில் வரும் உச்சரிப்புதான். Paediya என்றால் செல்லக்குட்டி. கடைசி எழுத்தில் ‘எ’வுக்குப் பதிலாக ‘ஓ’ போட்டால் செல்லக்குட்டீ…

பேடியோ (Paediyo)

சிங்களத்தில் பேடியோ (Paediyo) என்றால் செல்லக்குட்டி என்ற பொருள் வரும். அந்தத் தலைப்பில் ஒரு குறுநாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். பயணக் கட்டுரையை விட ஒரு நாவலுக்குரிய fantastic சம்பவங்கள் நடந்ததால் குறுநாவலாகவே எழுதி விடலாம் என்று முடிவு செய்தேன். எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் வெளிவரும்.

பாடை

என் வாழ்க்கையில் நான் யாருக்கும் பாடை கட்டியதில்லை. என் முதுகில் குத்திய ஒரு துரோகிக்கு நான் சென்னை வநததும் பாடை கட்டப் போகிறேன். சென்னையில் வசிக்கிறான். வினித்தின் நண்பன். வயது 75. அவனுக்கு இருக்கிறது என் கையால் பாடை. முதுகில் குத்தினால் அதுதான் வினை. இலங்கையில் அவனைக் கண்டதும் ஒரு குழந்தையைப் போல் ஓடிப் போய் கை கொடுத்தால் கையை விலக்கிக்கொண்டு மூஞ்சியைத் திருப்பிக் கொண்டான் துரோகி. அவனை 25 ஆண்டுகளுக்கு முன் செருப்பால் அடிக்க முனைந்தேன். … Read more