the making of a novel…

பேயைப் போல் படித்துக் கொண்டிருக்கிறேன். ராஸ லீலாவைப் போல் இன்னொரு நாவல் எழுத முடியாது என்றே என் நண்பர்களிடம் சொல்லி வந்திருக்கிறேன். ஆனால் பெட்டியோ ராஸ லீலாவைப் போல் இருக்கும் என்று தோன்றுகிறது. ராஸ லீலாவைத் தாண்டி விட்டதா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். ராஸ லீலா எதார்த்த சொல்லாடலால் ஆனது. ஆனால் பெட்டியோ metaphysical narrative மூலம் உருவாகிறது. வெறும் மெட்டாஃபிஸிக்ஸாக இல்லாமல் மெட்டாஃபிஸிக்ஸையே பருண்மையாக ஆக்கும் முயற்சியாக இருக்கும். அந்த உலகத்தில் வாழ்வதற்காக இப்போது … Read more

விதியை வென்றவர்கள்…

முப்பத்தாறாவது வயதில் அந்தக் கவிஞனிடம் மருத்துவர்கள் சொன்னார்கள், உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது, அதுவும் குணப்படுத்தவே முடியாத நிலையில் இருக்கிறீர்கள். சொஸ்தப்படுத்தவே முடியாத பைத்தியம் என்பதால் உலகம் அவரைக் கை விட்டது. சமூகம் கை விட்டது. அம்மாவும் கைவிட்டு விட்டாள். சகோதரியும் கை விட்டாள். ஆனால் ஒரே ஒரு தச்சர் குடும்பம் அவரைப் பராமரித்தது. அவர் மற்றுமொரு முப்பத்தாறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். அவருடைய வாழ்வை இரண்டு முப்பத்தாறுகளாகப் பிரிப்பார்கள். இரண்டாவது முப்பத்தாறிலும் அவர் சும்மா இருக்கவில்லை. … Read more