திரும்பத் திரும்ப விஷயதானம்…

ஜோடிப்புறாவை எங்கே காணோம்? என்ற என்னுடைய சமீபத்திய நாவலின் கடைசிப் பத்தியில் இதைச் சொல்லியிருக்கிறேன். என்னைச் சந்திக்கும் எல்லோருமே சொல்வது ஒன்றுதான். “என்னைப் பற்றி எழுதி விடாதீர்கள்.” அதற்கு என்னுடைய வேண்டுகோள்: எனக்கு விஷயதானம் கொடுக்காதீர்கள். கொடுத்தால் எழுதுவேன். நான் விஷயதானம் என்று சொல்வது எதெல்லாம் என்றும் அதில் எழுதியிருக்கிறேன். ஒரு இருபத்தைந்து வயது இளைஞன் என்னை சந்தித்தான். என் எழுத்தோடு சம்பந்தம் இல்லாதவன். என் வாசக நண்பர் ஒருவரின் மகன். பிரியும்போது “என்னைப் பற்றி எதுவும் … Read more

ஜோடிப்புறா நாவல் தயார்

‘ஜோடிப்புறாவை எங்கே காணோம்?’ நாவலை pdf வடிவில் வாங்க gpay எண்: 9245735566 (ராஜா) UPI id: charunivedita@axisbank நண்பர்கள் இந்த நாவலுக்குத் தங்களால் இயன்ற நன்கொடையை அனுப்பலாம். பணம் செலுத்திவிட்டு, ராஜாவுக்கு வாட்ஸப் செய்யவும். அல்லது, எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும். charu.nivedita.india@gmail.com

ஜோடிப்புறாவை எங்கே காணோம்?

இரவு பகலாக இந்த நாவலை எழுதினேன். இத்தனை தீவிரமாக, இத்தனை வேகமாக ஒரு நாவலை என் வாழ்வில் எழுதியதில்லை. ஐந்து தினங்களில் எழுதி முடித்தேன். மொத்தம் 20000 வார்த்தைகள். அன்பு நாவலின் அடுத்த பாகம் என்று கொள்ளலாம். இதன் பிடிஎஃப் வடிவம் தயாரானதும் யார் யாருக்கெல்லாம் தேவையோ அவர்களுக்கு அனுப்பி வைக்க இருக்கிறேன். என் நாவல்களின் மொழிபெயர்ப்புக்குப் பணம் தேவைப்படுகிறது. பெட்டியோ, அன்பு நாவல்களின் மொழிபெயர்ப்பு முடிந்து விட்டது. ராஸ லீலா பாகம் ஒன்று, பாகம் இரண்டு … Read more

ஒரு வேண்டுகோளும் ஒரு பிரார்த்தனையும்…

மாயமான் வேட்டை என்ற என் சிறுகதைத் தொகுதி ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் மூலம் வெளியாகியிருக்கிறது. எப்போதும் போல் பேராதரவு கொடுத்து வாங்குவீர்கள் என நம்புகிறேன். என் ஆசை எப்படியும் அறுபது பிரதிகளாவது விற்று விட வேண்டும் என்பதுதான். அப்படி அறுபது பிரதிகள் விற்று விட்டால் திருப்பதி வேங்கடவனுக்கு முடி காணிக்கை செலுத்தலாம் என்று வேண்டிக்கொண்டிருக்கிறேன். புத்தக விழாவில் நான் என் புத்தகங்களில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்த போது ஒரு விஷயம் கவனித்தேன். நூறு பேர் புத்தகம் வாங்கினார்கள் என்றால் … Read more

நலமா?

அன்புள்ள சாருவுக்கு, தாங்கள் நலமா? ஜலதோஷம் குணமாகிவிட்டதா? நேற்றிரவு தங்களின் ஒரு குறுநாவலுக்கு எழுதிய முன்னுரை கட்டுரையை வாசித்தேன். தாங்கள் குறிப்பிட்டது போல “நாற்பது ஆண்டு வாசிப்பின் சாரம்” என்பதின் கனத்தை என்னால் உணர முடிந்தது. தங்களுக்கு இக்கட்டுரையை எழுதி முடிக்க ஆறு மணி நேரம் ஆனதாக குறிப்பிட்டிருந்தீர்கள். வாசித்து புரிதலை அடைய எனக்கு மூன்று மணி நேரம் எடுத்தது, அவ்வளவு அடர்த்தியான கட்டுரை இது. சிம்யூலேஷன் ஹைப்பர்-ரியாலிட்டியாக தோன்றுவதும், அதன் விளைவுகள் இலக்கியத்தில் ஒரு விதமான பாதிப்பையும், தமிழ்த் … Read more