நெருப்புத் தேர்
பித்தனைப் போல் நானும் நெருப்புத் தேரில்தான் பயணிக்கிறேன் ஐம்பது ஆண்டுகளாக என் விரல்களிலிருந்து சுடர்விட்ட எழுத்துக்களைப் பற்றியபடி அதன் சக்கரங்கள் சுழல்கின்றன. மதியத்துக்குள் ஒரு முக்கியக் கட்டுரை அச்சுக்குப் போக வேண்டும் அப்போது தந்தை இறந்த செய்தி வந்தது. நான் போகவில்லை. தம்பியிடம் சடங்குகளை ஒப்படைத்துவிட்டு நான் தொடர்ந்து எழுதினேன். வார்த்தைகள் என்னை எரித்தன நான் அவற்றை எரித்தேன். கட்டுரையை அனுப்பிய பின் எடிட்டர் கேட்டார், “நீ மனிதனா?” நான் சொன்னேன்: “இல்லை. நானொரு நெருப்புத் தேர்.” … Read more