மொழிபெயர்ப்பு

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்படும் நூல்களை அதிகம் படிக்காதீர்கள். ஆங்கிலத்தில் சரளமாக வாசிக்க முடியாவிட்டாலும் தத்தித் தத்தியாவது ஆங்கிலத்திலேயே படித்து விடுவது நலம். சமீபத்தில் தெ வெஜிடேரியன் என்ற நாவலை தமிழில் கைமா பண்ணி வைத்தது பற்றி ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் எழுதியிருந்தார். what the hell என்ற ஆங்கிலப் பதத்தை என்ன நரகம் இது என்று மொழிபெயர்த்திருக்கிறார் திருவாளர் முழிபெயர்ப்பாளர். இதை விட பெரிய காமெடியையெல்லாம் நான் எடுத்துப் போட்டு தொங்கவிட்டிருக்கிறேன். ஆனாலும் முழிபெயர்ப்பாளர்கள் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். … Read more

பெங்களூரு இலக்கிய விழா

பெங்களூரில் ஆட்டா கலாட்டா என்ற பெயரில் ஒரு புத்தகக் கடை உள்ளது. அது ஆண்டு தோறும் இந்திய அளவில் எழுதப்படும் நூல்களுக்குப் பல பிரிவுகளில் விருது வழங்குகிறது. அதில்தான் 2024க்கான மொழிபெயர்ப்பு நூல்களின் நெடும்பட்டியலில் நான் எழுதிய ஔரங்ஸேப் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு (Conversations with Aurangzeb: A Novel) இடம் பெற்றிருக்கிறது. விருது வழங்குவதோடு அல்லாமல் ஆட்டா கலாட்டா பெங்களூரில் ஆண்டு தோறும் ஒரு இலக்கிய விழாவையும் நடத்துகிறது. இந்த ஆண்டு விழாவுக்கு நான் அழைக்கப்பட்டிருக்கிறேன். … Read more

அப்பா: உலகச் சிறுகதைகள்: ரிஷான் ஷெரீப்

என் நண்பர் ரிஷான் ஷெரீஃபுக்கு நேற்று (3.11.2024) பிறந்த நாள். புகைப்படத்தில் பார்ப்பதற்கு இருபத்தோரு வயது இளைஞராகத் தெரிகிறார். நேரில் சந்தித்தது இல்லை. ரிஷான் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். தி.ஜானகிராமனுக்குப் பிறகு என்னை மயக்கி வசியப்படுத்திய மொழி ரிஷானுடையதுதான். எங்கிருந்து இந்த மொழிநடையைக் கற்றார் என்பதுதான் பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. சி. மோகனின் மொழிநடையும் வசியம் செய்வது போல் இருக்கும். ஆனால் மோகன் என் வயதுக்காரர். ரிஷானுக்கோ என் பேரன் வயது. அதனால்தான் ஆச்சரியம். ஃபேஸ்புக்கில் நேற்று … Read more

சாருவுடன் சில தினங்கள்…

வாசகர்கள் எழுத்தாளர்களை நேரில் சந்திக்கக் கூடாது என்ற  கருத்தை சுஜாதா ஒரு தடவை சொல்லப் போக, தமிழ்நாட்டின் வாசிப்புத் தளத்தில் சுஜாதா அப்போது பெரும் சக்தியாக விளங்கியதால் அவர் சொன்னது அனைத்து வாசகரிடத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அது ஒரு தவறான கருத்து.  காரணம்? சாக்ரடீஸிலிருந்து இன்றைய எழுத்தாளர் வரை அவர்கள் எழுதியவற்றை விட பேச்சின் மூலமும் உரையாடலின் மூலமும்தான் அதிகமான சிந்தனை மாற்றங்களை வாசகரிடத்தில் ஏற்படுத்துகிறார்கள்.  என்னை எடுத்துக்கொண்டால், நான் எழுதியது வெறும் பத்தே … Read more

க்ராஸ்வேர்ட் விருது – சில விளக்கங்கள்

இந்த விருது பற்றி கருத்து சொல்லும் என் சக எழுத்தாளர்கள் சிலர் புத்தகத்தைப் படிக்காமல் வாக்கு அளிப்பது சரியல்லவே என்ற அறக் கேள்வியை எழுப்பியிருக்கின்றனர். இப்படி எழுப்பி எழுப்பித்தான் ஞானபீட விருது மலையாளத்துக்கு ஏழெட்டு, கன்னடத்துக்கு ஏழெட்டு, ஹிந்திக்கு ஒன்பது, வங்காளத்துக்கு ஏழெட்டு என்று கொடுக்கப்பட்டது. தமிழுக்கு மட்டும் ரெண்டு. அதுவும் அகிலனுக்கும் ஜெயகாந்தனுக்கும். காரணம் என்ன என்றால், இம்மாதிரி அறக் கேள்விகள்தான். ஏழெட்டு என்று உத்தேசமாக எழுதியிருக்கிறேன். அதற்கும் மேலேயே இருக்கும். நிச்சயம் பாருங்கள், இந்தியாவுக்கு … Read more

அட்டைக்கத்தியுடன் போர்க்களத்தில் இறங்கியவன்

க்ராஸ்வேர்ட் விருது குறும்பட்டியல் வெளிவந்துள்ளது. அதில் என்னுடைய நான் தான் ஔரங்ஸேப் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Conversations with Aurangzeb: A Novelஉம் இடம் பெற்றுள்ளது. கூடவே கேரள எழுத்தாளர் ஏ.ஜே. தாமஸின் நூலும் உள்ளது. இந்நேரம் கேரளத்தில் மாத்ருபூமியிலும், மலையாள மனோரமாவிலும் இது பற்றிய விரிவான செய்தி அவரது புகைப்படத்துடன் முதல் பக்கத்தில் வந்திருக்கும். ஒவ்வொரு தினசரிக்கும் லட்சக்கணக்கில் வாசகர்கள் உண்டு. ஒவ்வொன்றுக்குமாக முப்பதாயிரம் என்றாலும் இந்நேரம் அறுபதாயிரம் பேர் தாமஸின் நூலுக்கு வாக்களித்திருப்பார்கள். எனக்கு … Read more