ஆகப் பிடித்தவைகளின் பட்டியல்

ஆகப் பிடித்த புத்தகம்—பழைய காகிதத்தில்பழுப்பு நிற மணம் மறையாவார்த்தைகள் ஆகப் பிடித்த எழுத்தாளர்—காற்றில் கவிதைகளைச் சுருட்டி வீசுபவர். ஆகப் பிடித்த உணவு—என் அம்மை ஆண்டாளுக்குப் பிடித்தது ஆகப் பிடித்த மது—இரவை மறந்து சிரிக்க வைக்கும் திராட்சை ரசம் ஆகப் பிடித்த பொழுதுபோக்கு—மேகங்கள் தீட்டும் சித்திரங்களில்என்னை இழப்பது ஆகப் பிடித்த சினிமா—என்னை எனக்கே நினைவூட்டும்பாத்திரங்களின் சலனம் எல்லாம் சொன்னேன். ‘ஆகப் பிடித்த தருணம்?’என்றார் கடவுள், ‘ஒரு மலைவாசஸ்தலத்தில்,முன்னிரவு நேரத்தில்,நெருப்புக் கம்பளம் பரவி எரிய,பைன் தேவதாரு மரங்கள் மெல்லிய பாடல் … Read more

மலர்கள் கொண்டு வந்த செய்தி

அன்பே, நான் மலர்களைப் பறிக்க ஒருபோதும் விரும்பியதில்லைசெடியின் மௌன உயிரைத் தொடுவது பாவமெனத் தோன்றும்ஆனால் இன்று, வாழ்விலே முதல்முறையாய்ஒரு மலர்க்கொத்து என் கைகளில் தவழ்ந்தபோதுஉன் புன்னகையின் நிழல் அதில் மின்னியதுநெஞ்சம் வண்ணத்துப் பூச்சியாய் மாறியதுஅதன் றெக்கைகள் நட்சத்திரங்களின் மொழியில்முணுமுணுத்தனவானம் ஒரு கணம் தன் முகத்தைத் திறந்து சிரித்ததுகாற்று, புல்லாங்குழலின் மென் சுருதியாய் மாறி,காலத்தின் மடிப்புகளில் மெதுவாய் மறைந்ததுஎப்படி இது நிகழ்ந்தது அன்பே?ஒரு மலரின் மொழிஎன் இதயத்தை விண்மீன்களின் பாதையில்பறக்கச் செய்தது அந்தக் கணத்தில் நான் நானாக இல்லைஉலகின் … Read more

இரண்டு குறுங்கவிதைகள்

1.சொந்த ஊர்நூறாண்டுப் பழமைஆளரவம் இல்லைஎங்கோ பாங்கு ஒலிக்கிறது_______________________________________________________________ 2. ’கொலைக்குத் தண்டனை இல்லை’அறிவித்தவுடன்தன்னை அழித்துக்கொண்டான்மனிதன் நதிகள் பாடினகுளங்கள் சிரித்தனமலைகள் மூச்சுவிட்டனகடல்கள் நடனமாடினமண்ணும் மிருகங்களும்இன்பமுற்றன.

கோவா

சென்ற ஆண்டு புருஷன் வெளியீட்டு விழாவுக்காக கோவா சென்ற போது கோவாவை என்னால் பார்க்க முடியவில்லை. அப்போது நான் நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். அது பற்றிய குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தேன். மூன்று மணி நேரம் பேசினேன் என்று நினைக்கிறேன். உடனடியாகத் திரும்பி விட்டேன். இப்போது ஜூன் இருபதாம் தேதி கோவா செல்கிறேன். எந்த வேலையும் இல்லாமல் ஓய்வெடுக்கச் செல்கிறேன். அதுவும் ஒரு வாரம். இருபத்தாறாம் தேதி மாலை கோவாவிலிருந்து பெங்களூர் செல்கிறேன். அங்கே முப்பதாம் தேதி வரை இருப்பேன். … Read more

நட்சத்திர எண்கணிதம்

மோகினிக்குட்டியின் மென் புன்னகையில்எண்களை நெய்துஅவள் பிறந்தநாளைக் கண்டெடுத்தேன். சொற்களைக் கோத்துஅவள் பாதம் பூஜித்தேன். நிலவொளியில் ஓய்ந்த குளத்தின் அமைதியாய்மௌனித்திருந்தாள்.மௌனத்தின் ரகசியம் கேட்டேன். ‘இதுவரை யாரும் வாழ்த்தியதில்லை’என்றாள் ‘நான் விண்மீனாய் மாறினாலும்,ஒளியின் ரூபமாய்உன் பிறந்தநாளில் வாழ்த்துவேன்’என்றேன்.

தனியாக…

நான் நடக்கிறேன்காற்றில் என் நிழல் மட்டும் தொடர்கிறது நான் உறங்குகிறேன்இரவின் மௌனம் என்னை மூடுகிறது நான் உண்ணுகிறேன்தட்டில் நிறைகிறது வெறுமையின் சுவை. நான் மைதுனம் செய்கிறேன்என் மனம் மட்டும் என்னோடு புணர்கிறது. நான் எழுதுகிறேன்என் எழுத்து எனக்குள்ளேயே சுழல்கிறது நான் வாசிக்கிறேன்புத்தகத்தின் பக்கங்கள் வாசிப்பின் தனிமைகூட்டுகின்றன நான் இசை கேட்கிறேன்ஒலியில் மூழ்கி மறைகிறேன் நான் தியானத்தில் ஆழ்கிறேன்என் மனம் வெளியாகி என்னை விட்டுநீங்குகிறது நான் சிரிக்கிறேன்என் பிறழ்வு கண்ணாடியில் சிதறுகிறது நான் அழுகிறேன்என் கண்ணீர் அபத்த உலகில் … Read more