பூச்சி 110
க.நா.சு.வைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது வேறு எதையும் தொடக் கூடாது. ஆனால் நான் பெருந்தேவியின் கவிதைகளுக்குப் பெரும் ரசிகன். ஏற்கனவே பெருந்தேவியின் கவிதை பற்றிப் பலமுறை எழுதியும் இருக்கிறேன். இப்போது இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள் மாட்டிக் கொண்ட அவர் உரைநடையாக எழுதித் தள்ளுகிறார். குறுங்கதைகள். ஏற்கனவே சில கதைகளைப் படித்து “ஏன் என்னிடம் முன்னரே சொல்லவில்லை?” என்று அவரிடம் சண்டை போட்டிருக்கிறேன். அதனால் இப்போது சில இணைப்புகளை அனுப்பியிருந்தார். உடனே அவசர அவசரமாகப் படித்தேன். … Read more