Scent of a woman

இந்தப் படத்தை எப்படி இத்தனைக் காலமாகத் தவற விட்டேன் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் இதில் வரும் த்தாங்கோ நடனக் காட்சியை மட்டும் பார்த்திருக்கிறேன். அல் பச்சீனோவின் உச்சக்கட்ட நடிப்பை வெளிப்படுத்தும் படம். இந்தப் படத்தில் நடிப்புக்காக அவர் ஆஸ்கர் விருதும் பெற்றிருக்கிறார். நேற்று நாள் முழுதும் எழுதி விட்டு ஸில்வியா ப்ளாத்தின் தெ பெல் ஜார் நாவலைப் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு எட்டரை மணி வாக்கில் ஏதாவது படம் பார்க்கலாம் என்று தோன்றியபோது இந்தப் படம் கண்ணில் பட்டது. … Read more

வர்ஜீனியா வுல்ஃபும் ஸில்வியா ப்ளாத்தும்…

உல்லாசம் நாவல் வெளிவரும் வரை அது பற்றி ஒரு வார்த்தை எழுதக் கூடாது என்று இருந்தேன். ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. நாவலின் தலைப்பு மாறி மாறி உருண்டுகொண்டே இருக்கிறது. Ullasa: The Erotics of Being என்று ஒரு தலைப்பு சரியாக வரும் என்று தோன்றுகிறது. நாவலின் நாயகி ஸஞ்ஜனாவின் நாட்குறிப்புகளில் நானே ஒரு பெண்ணாக உருமாறிக்கொண்டிருக்கிறேன். ஸ்ரீ பெருமளவுக்கு உதவி செய்கிறாள். ஸஞ்ஜனாவை எழுதிக்கொண்டிருக்கும்போது தவிர்க்கவே முடியாமல் ஸில்வியா ப்ளாத் மற்றும் வர்ஜீனியா வுல்ஃபின் ஞாபகம் … Read more

அன்பு

தலைப்பில் Empathy என்றுதான் இருக்க வேண்டும். ஆனால் ஆங்கில வார்த்தைகளைக் கலப்பது எனக்குப் பிடிக்காது என்பதால் அன்பு எனத் தலைப்பிட்டிருக்கிறேன். அன்பு என்ற பெயரில் என்ன்னென்ன அராஜகங்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை அன்பு நாவலிலேயே விலாவாரியாகப் பேசியிருக்கிறேன். அன்பு என்பதை இன்றைய சமூகம் மிகத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறது. புத்திமதிகள் சொல்வதும், போதனை புரிவதும்தான் அன்பு என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல் அன்பு என்ற பெயரில் அடுத்தவர் சுதந்திரத்தில் குறுக்கிடும் வன்முறையும் நடக்கிறது. உதாரணம், எனக்குத் தேநீர் பிடிக்காது. குடித்தால் … Read more

பற்றிக்கொள்ள ஒரு தோள்…

காலையில் நடைப்பயிற்சி செல்வதற்கு உரிய சரியான ஆடைகள் இல்லாததால் நான் வழக்கமாக எடுக்கும் ரேர் ரேபிட் கடை இருக்கும் ஃபீனிக்ஸ் மாலுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.  யாரோடு செல்வது?  சென்னையில் எனக்கு அதற்குத் தோதான நண்பர்களே இல்லை என்பதை முதல் முதலாக உணர்ந்தேன்.  இந்த வேலைக்கெல்லாம் செல்வா சரிவர மாட்டார்.  மட்டுமல்லாமல் அவர் ஊருக்குப் போயிருந்தார்.  சீனி கொலை பிஸி.  அவரை இதற்கு இழுத்தடிக்க முடியாது.  சுரேஷ் நெடுஞ்சாலைப் பயணம் சென்றிருக்கிறார். எங்கே அழைத்தாலும் வரக்கூடிய ராஜா … Read more

பாரிசாகரனின் கவிதை நூல் வெளியீட்டு விழா

இன்று (15.2.2025) மாலை ஆறு மணிக்கு சென்னை கோடம்பாக்கத்தில் பாரிசாகரனின் போதமற்ற குறளிகளின் வினையாடல் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. இதில் நான் கலந்து கொள்ள இருக்கிறேன். வர முடிந்தவர்கள் வர வேண்டும் என அழைக்கிறேன். விழா அழைப்பிதழில் மற்ற விவரங்கள் உள்ளன.