அணில் என்னும் சிநேகம்

மானுடரோடு பேசுவதில் மனம் களைத்துஅந்தக் கானகத்தின் மௌனத்தில்ஒரு பாறையின் குளிர்ந்த தோளில்என் தனிமையை சாய்த்திருந்தேன். அப்போது ஒரு அணில் குஞ்சுஇலைகளினூடாக நடனமாடியபடிஎன்னருகே வந்துஅங்கே இறைந்து கிடந்த சொற்களைஒளிரும் முத்துக்களெனஒவ்வொன்றாய்ப் பொறுக்கியெடுத்துஅதன் மென்மையான வாலால் துடைத்து,என் முன்னே அடுக்கியது. நான் கேட்டேன், “எதற்கு இந்த முயற்சி,என் சொற்களை நீ ஏன் தேடுகிறாய்?” அது சிரித்து, “உன் மௌனம் பேச,இது எனது சிறிய காணிக்கை” என்றது நான் நன்றி சொல்லும் முன்நிழலென உருண்டு வந்தவொருகாட்டுப்பூனை அந்த அணிலைக்கவ்விக்கொண்டு கானகத்தின்இருளில் மறைந்தது … Read more

மாயத்திரை

ஊருக்குப் போயிருந்தாள் மனையாள்ஒரு மாதம்உன் நண்பர் யாரும் இங்கேவரலாகாது, இதுயென் உத்தரவென்றாள் சரியென்றேன்வேறென்ன சொல்ல? மனையாள் சொல்வதெதையும்கேட்டதில்லை நண்பர்கள் வந்தார்கள்இருவர்இரண்டு நாள் தங்கி விட்டுச்சென்றார்கள் பிறகுதான் கண்டேன்படுக்கையறைத் திரைச்சீலைமுன்பக்கம் பின்பக்கமாகியிருந்ததுகவனமாகக் கேளுங்கள்திரைச்சீலை ஒன்றல்லஇரண்டுஒரு திரைச்சீலை மட்டும்மாறியிருந்ததுஇடப்பக்கத் திரைச்சீலைஒரு வண்ணம்வலப்பக்கத் திரைச்சீலைஇன்னொரு வண்ணம்புரளாமல் இருந்திருந்தால்இரண்டும் ஒரு வண்ணம் மனையாள் வந்தால்இது என்னவென்று கேட்பாளாமாட்டாளா இது என்னடா சங்கடமென்றுநண்பர்களிடம் கேட்டேன் தெரியாதே என்றனர் இந்தச் சிக்கலைவிடுவிப்பதெப்படியெனசாளரத்தில் வந்தமர்ந்தமைனாவிடம் கேட்டேன் இதெல்லாம் ஒரு பிரச்சினையாஒரு தச்சனையழைத்துசரி செய்யென்றது மைனா சொன்னபடிசெய்தேன் மறுநாள் … Read more

பராரி

1 காந்தியைக் கண்டதில்லைஞானிகளின் முகமறியேன்சூஃபிகளின் சொல்லறியேன்அதிசயங்கள் பற்றிப் படித்ததோடுசரி மனையாள் சொன்னாள்:“ஒரு ஞானியைக் கண்டேன்எல்லோரையும் கட்டியணைத்தார்கட்டியணைத்தவரெல்லாம்மயங்கி விழுந்தார்”என்னையும் கட்டிணைத்தார்மயக்கமில்லைஅவர் அடித்திருந்த Brutநறுமணம் மட்டும் மனதில்தங்கியது ‘நீவிர் அடிக்கடிதொலைக்காட்சியில் தோன்றுவீர்’என்றார் ஆசி வழங்கும் வேளையில்இன்று அவர்பணமோசடியில் கம்பி எண்ணுகிறார்அதிசயங்களில் என் அனுபவம்இத்தோடு முடிந்தது ஆனாலும் எனக்கு அதிசயங்கள் மீதானஆர்வம் குறையவில்லைததாகதர் முதல் ரமணர் வரை 2 சத்திய லோகத்தில்தான் அதிசயங்கள்உண்டு என்றொரு நாள்கனவு கண்டுசத்திய லோகம் புறப்பட்டேன் நம்ப முடியாததொரு பாழ்வெளிசெவிகள் கிழிபடும் மௌனம்பஞ்சத்தில் மாண்டஎலும்புக்கூடுகளின் குவியல்உயிர் பிழைத்திருந்தோர்முனகியதைக் … Read more

நான்கு

1 நீ என் முதுகில் குத்திய காயம்என்றுமே ஆறப் போவதில்லைஉனக்கு உன்னைத் தவிரவேறு எது முக்கியம்,சொல்உன்னையே என் வாழ்வின்முதல் மனிதனாக நினைத்தேன்முதுமையைத் தொட்ட பின்னும்உலகப் பொய் வாழ்க்கையில்ஏன் மாய சுகம் தேடிஅலைகிறாய்?அனுபவித்தது போதாதா? 2 எல்லாம் சரிஎல்லாம் சரிகாமக்கனலில்கருகும் சருகாய்நியாயம் தொலைத்தேன் 3 ஏதென்று எடுத்துரைப்பேன்மோகினியின் நயனமும்தடமுலையும் கண்டால்அதுவே பெரும் விசாரமாகிசித்தம் கலங்கிப்பித்தனாகிறேன் 4 நீ ஒரு பாம்பின் நிழல்

புதிய வேடம்

1காதல்களைக் கடந்துவருகிறேன்.“நீயே என் கடைசி”என்பதானபழைய வசனங்கள்என்னையும் பிணைத்திருந்தன—அந்தக் கலைஞனைசந்திக்கும் வரை. ஒரு வேடம் களையும்போதுபழைய மண்ணின் தடம்அறவே அகல வேண்டும்,மணமும் மறைய வேண்டும்,புதிதாய்ப் பிறந்தவனாய்நிற்க வேண்டுமெனஅவன் சொன்னான். 2அவ்வண்ணமேஒருத்தியை செல்லமென,மற்றவளை மலரென,ஒருத்தியை மயிலென,இன்னொருத்தியை முத்தெனவேறு வேறு நிறங்களில்அழைக்கத் தொடங்கினேன். “நீயே கடைசி” என்பதைமனதில் கூட வைக்கவில்லை.3நேற்றின் பாரத்தைநாளையின் பதற்றத்தைகழற்றி வீசி,இந்தக் கணத்தைசுவாசித்துஆழ்கிறேன் ReplyForwardAdd reaction

காலம்

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறுஏழு எட்டு ஒன்பது பத்து பதினொன்றுபன்னிரண்டு பதின்மூன்று ……………………………………………………..அறுபது நொடிகள்ஒரு நிமிடம்ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் மூன்று நிமிடம்நான்கு நிமிடம் ஐந்து நிமிடம் ஆறு நிமிடம்ஏழு நிமிடம் எட்டு நிமிடம் ஒன்பது நிமிடம்பத்து நிமிடம் பதினோரு நிமிடம் பன்னிரண்டுநிமிடம் பதின்மூன்று நிமிடம்…………………………………………………………………..அறுபது நிமிடம் ஒரு மணிஒரு மணி இரண்டு மணி மூன்று மணிநான்கு மணி ஐந்து மணி ஆறு மணிஏழு மணி எட்டு மணி ஒன்பது மணிபத்து மணி பதினோரு … Read more