ஒரு இலக்கியத் திருட்டு

நான் இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்த கருத்துகளைத் திருடி கவிதை எழுதி விட்டார் ஒரு கவிஞர். ஸ்பானிஷ் கவிஞரான அவருக்கு தமிழ் எப்படித் தெரியும் என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது. என்னுடைய அந்தக் கட்டுரை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்படவில்லை. இருந்தும் எப்படி இந்த இலக்கியத் திருட்டு நடந்தது என்று தெரியவில்லை. வன்மையாகக் கண்டிக்கிறேன். இதை என் கவனத்துக்குக் கொண்டு வந்த ஸ்ரீராமுக்கு நன்றி. என்னிடமிருந்து திருடியவர் பெயர் நிகானோர் பார்ரா. கீழே கவிதை: I’m Not a … Read more

காட்டுமிராண்டிகளின் சமூகம்

வில் ஸ்மித் என்ற நடிகரின் மனைவியை ஆஸ்கர் மேடையில் ஒரு காமெடி நடிகர் bodyshame பண்ணி விட்டார்.  அதற்கு எதிர்வினையாக வில் ஸ்மித் அந்தக் காமெடி நடிகரை மேடைக்குப் போய் கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.  காணொலியைப் பார்த்தேன்.  பளார் என்றுதான் அறைந்தார். இந்தச் சம்பவம் குறித்து தமிழகத்தின் புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் அத்தனை பேரும் வில் ஸ்மித்தைப் பாராட்டி எழுதிக் குவிக்கிறார்கள்.  உலகெங்கிலும் ஒடுக்கப்படும் இனம் என்று பார்த்தால் பெண்களும் அதில் உண்டு.  பெண்களை விட … Read more

கேள்வி 100: 16ஆவது கேள்வி. நேரில் சந்திக்க இயலுமா?

16. வணக்கம், நான் நேசராஜ் செல்வம். ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியன். உங்களுடன் CPMG அலுவலகத்தில் பணியாற்றி இருக்கிறேன். தற்போது ஓய்வூதியம் மட்டுமே பெற்று வருகிறேன். நான் உங்களுக்கு என்னால் இயன்ற போது பணம் அனுப்ப விரும்புகிறேன்.உங்களது நிபந்தனைகள் கடுமையாக இருப்பதால் ஓய்வூதியம் பெறும் நான் பண உதவி செய்ய தடையேதும் உளதோ என தெரிவியுங்கள்.  மேலும் தற்போது நான் கிருஷ்ணகிரி நகரில் வாசம். பெரும்பாலான உங்கள் நூல்களை வாங்கிப் படித்துள்ளேன். ஔரங்ஸேப் பற்றி சொல்ல வார்த்தைகள் … Read more

எவ்வளவோ எழுதியிருக்க வேண்டியவர்…

அமிர்தம் சூர்யா என் மீது அன்பு மிகக் கொண்டவர்.  என் இளவல்.  அதை விட முக்கியமாக, என்னைப் போலவே அல்லது அதை விட அதிகமாகவே வெகுளி.  சமீபத்தில் அவர் இப்படி எழுதியிருந்தார். ”சாரு நிவேதிதாவின் எழுத்தாற்றலை புகழ்ந்து இன்னும் எவ்வளவோ எழுதியிருக்க வேண்டியவர் என்று ஆதங்கம்.காட்டினார்…” சூர்யா ஒரு நண்பரைச் சந்திக்கிறார்.  இலக்கியவாதிகளின் சந்திப்பில் எத்தனையோ பேசுவோம்.  அதையெல்லாம் நாம் நம்முடைய சொந்தக் கருத்தாக வெளியே முன்வைப்போம் என்று சொல்வதற்கு இல்லை.  பல விஷயங்கள், பல அபிப்பிராயங்கள் … Read more

பெயர்க் குழப்பம்: குழந்தைகள்: நூலகங்கள்

சீனி என்னை அழைத்து ஔரங்ஸேப் விழா பற்றி எழுதியதில் ஒரு சிறிய மாற்றம் செய்ய முடியுமா என்று சிவபாலன் கேட்கிறார் என்றார். சிவபாலனா, ”திருப்பூர்க்காரர்தானே? ஒரு லட்சம் கொடுத்தாரே?” என்றேன். அதில்தான் பிரச்சினையே… என்ன பிரச்சினை? அவர் திருப்பூர் இல்லை, பொள்ளாச்சி. ஓ, மாற்றி விடுகிறேன். அது மட்டுமல்ல. பின்னே? அவரைப் பற்றி நீங்கள் எழுதியதைத் தன் நண்பர்களிடமும் குடும்பத்திலும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் பெயரும் தப்பாக உள்ளது, ஊரும் தப்பாக உள்ளது. … Read more

சிறார்களுக்கான நூலகம்

என் வாசகியும் தோழியுமான ப்ரியாவும் அவர் கணவர் செல்வராஜும் சேர்ந்து வளவன்கோட்டை (திருநெல்வேலி) கிராமத்தில் 20.3.2022 அன்று குழந்தைகளுக்கான (5 வயதிலிருந்து 15 வயது வரை) ஒரு நூலகத்தைத் தொடங்கியுள்ளனர். இப்போதைக்கு 300 புத்தகங்கள் உள்ளன. மாதந்தோறும் குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறையும் நடக்க உள்ளது. இதை நான் வெகு காலமாகச் சொல்லி வருகிறேன். திராவிடக் கட்சிகள் இலக்கியத்துக்காக என்ன செய்ததோ செய்யவில்லையோ, நான் உருவானதே நூலகங்களால்தான். ஆரம்பத்தில் படிப்பகங்களாக இருந்தன. எம்ஜியார் படிப்பகம்தான் முதல். தரையில் பாய் … Read more