நண்பர்களே பிரச்சினை, எதிரிகள் அல்ல…

அபிலாஷ் என்னுடைய இரண்டாவது நாளையும் வீணடித்து விட்டார், என் மீது காறித் துப்பிய நபருக்கு வக்காலத்து வாங்குவது மூலமும், என்னிடம் சம்பந்தமே இல்லாமல் மன்னிப்புக் கேட்பதன் மூலமும்.   பின்வரும் பதிவைப் படித்துப் பாருங்கள்.  இது அபிலாஷ்: மன்னிப்பு அவர் என் நண்பர்களில் ஒருவர். நேர்மையானவர், வெளிப்படையானவர், பொய்யில்லாதவர், ஒரு இலக்கிய இதழைக் கொண்டு வர கடுமையாக உழைப்பவர். அதே நேரம் சற்று துடுக்கானவர். தனது விழுமியங்களுக்கு எதிரானவர்களை கடுமையாக சாடி எழுதுபவர். அவருடைய ஒரே பிரச்சனை, என்னைப் … Read more

எட்டி எழுகவென்றறம்!

ஜெயமோகன் எழுத்துகளை நான் கொஞ்சம்தான் படித்திருக்கிறேன்.  அநேகமாகத் தமிழ் தெரிந்த யாருமே இப்படித்தான் சொல்லிக் கொள்ள முடியும்.  அவர் அத்தனை எழுதியிருக்கிறார்.  நான் படித்த கொஞ்சத்தில் அறம் ஒரு மறக்க முடியாத கதை.  ஏனென்றால், அது என் கதை.  அதில் வரும் ஒரு எழுத்தாளன் நான்தான்.  ஜெயமோகன் கற்பனை பண்ணினது வேறு நபர்.  ஆனால் படித்த எனக்கு அது நான் என்று தோன்றியது.  காரணம், அதை நான் வாழ்ந்திருக்கிறேன்.  அந்தக் கதையில் ஒரு ஆச்சி வருகிறாள்.  என் … Read more

’பையா’ பற்றிய ஒரு குட்டிக் கதை

…இதற்கிடையில் ‘பையா’ அழைத்தார். “May I help you?” என்று கேட்டார். ”கடவுளிடம் ஒப்படைத்து விட்டேன் பையா” என்றேன். “சுபஹானல்லாஹ், நீங்க மாறவே இல்ல பையா” என்றார். ’பையா’ யாரா? ராஸ லீலாவில் வருவார்.

அவதூருக்கு எதிர்வினை (2): ரிஷி

ரிஷி: எனக்கு இது வரைக்கும் புரியாத புதிர் என்னான்னா, இலக்கியம் படிச்சும் எரும மாடு மாதிரி எப்டி திரிய முடியும்ங்கிறதுதான்!! இப்டி கூச்ச நாச்சமே இல்லாம போஸ்ட் போட்றது, அந்த பக்கம் இணைய இதழ் நடத்திக்கிட்டு எலக்கியம் வேற!! இன்னும் எத்தன காலத்துக்குதா இப்டி அதர பழைய குற்றச்சாட்டப் போடுவீங்க சாருவுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் இல்லேன்னு!? இத கேட்டுக் கேட்டு புளிச்சு போச்சு. யார்ரா நீங்கலாம்!!!! எனக்கு ஒரு கேள்வி. சினிமாவுல நடக்காத தில்லாலங்கடி வேலையா? என்னோட … Read more

அவதூறுகளும் ஆன்மீகப் பயிற்சியும்…

அன்புள்ள சாரு, உங்களை அவதூறு செய்திருப்பவர் பெரிய இலக்கியவாதியோ பெரிய எழுத்தாளரோ கிடையாது. ஒரு இணைய இதழ் நடத்துகிறார். அதில் பெரும்பாலும் ரஷ்ய இலக்கிய மொழிபெயர்ப்புகள் மட்டுமே பிறரால் செய்யப்பட்டு அதில் வருகிறது.  இவர் எப்பொழுதும் தனது பேஸ்புக்கில் மற்றவர்களை சாடி மட்டுமே கிண்டலாக எழுதுவது வழக்கம். எப்பொழுதும் அவர் பார்ப்பனன் பார்ப்பனன் என்று எழுதிக் கொண்டே இருப்பதால் ஒருமுறை நான் கேள்வி கேட்டேன். (நான் பார்ப்பனன் கிடையாது). அதற்கு பதில் தராமல் நான் கமெண்ட் எழுத … Read more