புத்தக வெளியீட்டு விழா

ஹாய் சாரு, ம்யூசியம் தியேட்டரிலும், சர் பிட்டி தியாகராய அரங்கிலும் தலா 500 பேர் தான் உட்கார முடியும். நமக்கு பத்தாதுங்க சாரு. ஃபிலிம் சேம்பர் அரங்கில் 350 பேர் உட்காரலாம். அதுவும் பத்தாது. ம்யூசிக் அகாடமி, வாணி மஹால், நாரத கான சபா ஆகியவற்றில் தொலைபேசியில் கேட்டேன். டிசம்பர் முழுவதுக்கும் கச்சேரிக்கு மட்டும்தான் இடம் என்று கூறி விட்டனர். லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் 1200 பேர் உட்காரலாம். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய் ஆகிறது. … Read more

ஐரோப்பாவுக்கும் துருக்கிக்கும் இடையேயான தூரம்…

பல அந்நிய மொழிப் பெயர்கள் இங்கே தமிழில் தப்புத் தப்பாகவே உச்சரிக்கப்பட்டு, எழுதப்பட்டு அப்படியே நினைவிலும் தங்கி விட்டன. அதில் ஒன்று, இஸ்தான்புல் என்று தவறாகச் சொல்லப்படும்/எழுதப்படும் இஸ்தம்பூல்.  துருக்கியும் துனீஷியாவும் இஸ்லாமிய நாடுகள் என்றாலும் கிட்டத்தட்ட ஐரோப்பிய நாடுகளை ஒத்த கலாச்சார சாயல்களைக் கொண்டவை.  இஸ்தம்பூல் சென்னையைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியது.  அதில் ஐரோப்பியப் பகுதியும் ஆசியப் பகுதியும் உண்டு.  இரண்டையும் கடக்க ஃபெர்ரியில் போக வேண்டும். ஐரோப்பிய இஸ்தம்பூல் கிட்டத்தட்ட ஐரோப்பா.   … Read more

இறைவனுக்கு ஒரு கடிதம் – விவாதங்கள் (2)

டியர் சாரு இது நான் உங்களுடைய புது எக்ஸைல் வாசித்துவிடுட் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதியனுப்பிய கடிதம். [உங்களிடமே கேட்பது சரியில்லை என்று தோன்றியது. நெகட்டிவாக என்ன சொல்கிறார் என்றுபார்ப்போமே என்று கேட்டேன்] திரு ஜெ., நான் சாருநிவேதிதா என்பவரின் எக்ஸைல் என்ற ஆயிரம் பக்க நாவலை வாசித்தேன். அது எனக்கு பெரிய அளவிலே மன அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. கிழித்து வீசவேண்டும் என்று நினைத்தேன். இதையெல்லாம் இலக்கியம் என்று சொல்லலாமா? ஆறு.கணேசன். அன்புள்ள ஆறு. கணேசன், ஒன்று … Read more

விவாதங்கள் – 1

அன்புள்ள சாரு, தோப்பில் முகமது மீரான் எழுதிய “ஒரு கடலோர கிராமத்தின் கதை” நாவல் வாசித்தேன். கிளாசிக். கடற் பகுதி முஸ்லிம் மக்களின் வாழ்க்கையை வேரிலிருந்து நுனி வரை அலசிச் செல்கிறது. இந்த நாவல் ஆங்கிலத்திலும், ஜெர்மனிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. நேற்று மீரானைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. எத்தேச்சையானதுதான். என் வீட்டிலிருந்து நாலு கிலோமீட்டர் தொலைவில்தான் மீரான் வசிக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவர் தமிழை விட மலையாள இலக்கியங்களே அதிகம் … Read more

கேள்வி பதில் (5)

கேள்வி: விதி பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (அன்புள்ள சாரு, மேலே உள்ள கேள்விக்கு விரிவாக பதில் தேவை.  இந்தக் கேள்வி நாம் எதை அந்தரங்கம் என்று சொல்கிறோமோ அதன் அடிப்படையில் கேட்கப்பட்டது அல்ல.  என் பெயரையோ ஊரையோ தெரிவிக்க வேண்டாம்.) பதில்: சமீபத்தில் ஈரோட்டில் ஒரு சுவடி ஜோதிடரை சந்தித்தேன்.  நம் பகுத்தறிவுவாதிகள் இதையெல்லாம் படுமூடத்தனம் என்று சொல்வார்கள்.  நானும் இதை மூடத்தனம் என்றே நம்ப விரும்புகிறேன்.  ஆனால் எதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது.  அந்த ஆளுக்கு … Read more