3. கொல்லும் இச்சை பற்றிய பதிலின் தொடர்ச்சி…

ஜனன மரணம் பற்றிய பதிலில் ஒரு முக்கியமான விஷயம் விடுபட்டு விட்டது.  லா பெத்தி மோர்த் (La petite morte) என்று சொல்வார் ஜார்ஜ் பத்தாய்.  சிறிய மரணம்.  கலவியின் உச்ச இன்பம் மரணத்துக்கு ஒப்பானது என்கிறார். கலவியில் ஈடுபடுவோர் தம்மை முழுதாக மறக்கிறார்கள் அல்லவா, அதனால்தான் அது சிறிய மரணம்.  ஆக, இதையும் சேர்த்துக் கொண்டால், கொல்லும் இச்சை என்பதை நாம் கலையாகவும், சிருஷ்டியாகவும் உருமாற்றம் செய்து விடலாம்.    4. நாகூரில், போக்குவரத்து குறைந்த, … Read more

ஔரங்ஸேப் நூறு

நான்தான் ஔரங்ஸேப்… நாவல் நூறாவது அத்தியாயத்தைத் தாண்ட இருக்கிறது. அதற்காக மார்ச் 19 அன்று புதுச்சேரி ஆரோவில்லில் ஒரு விழா நடக்க உள்ளது. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். விழாவில் மதுவுக்கு அனுமதி இல்லை. மற்றபடி மதியம் மற்றும் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யலாம் என்று திட்டம். அதற்கு நிதி உதவி இருந்தால் நல்லது. முடிந்தவர்கள் உதவலாம். பணம் அனுப்பும்போது மார்ச் 19 விழா நிதி என்றோ ஔரங்ஸேப் விழா என்றோ குறிப்பிட்டு அனுப்பினால் வசதியாக இருக்கும். … Read more