முதல் நூறு : 6

6. கே: உங்களைப் பொறுத்தவரை வாழ்க்கை என்றால் என்ன? வாழ்க்கையின் நோக்கம் என்ன? திருமலைக் கொழுந்து வாழ்க்கை: தப்பாக ஆடிய, திருத்த முடியாத ஆட்டம். நோக்கம்:  யாரையும் துன்புறுத்தாதிருத்தல். யார் மீதும் அதிகாரம் செலுத்தாதிருத்தல்.

முதல் நூறு : 5

5. இலக்கிய ஆக்கங்களை மறு வாசிப்பு செய்யும்போது, அந்த படைப்பு  முன்பு நம்மில் ஏற்படுத்தி இருந்த தாக்கத்தை முற்றிலும் மாற்றக்கூடிய தருணங்கள் சில உண்டு. உங்களின் பார்வையில், மறு வாசிப்பில், மறு வாசல் ஒன்றினை திறந்த படைப்புகள் இரண்டை குறிப்பிட இயலுமா? யோகேஸ்வரன் ராமநாதன். பதில்: என்னைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்குத் தெரியும், எனக்கு அப்படி நடந்துள்ளது.  புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன் ஆகிய இருவரையும் மறு வாசிப்புக்கு உட்படுத்திய போது கடவுளை தரிசித்தது போல் உணர்ந்தேன்.  இளம் … Read more