சொற்கடிகை – 15

ஸீரோ டிகிரி நாவல் வெளிவந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னமும் அள்ளிக் கொண்டுதான் போகிறார்கள்.  அந்தப் புத்தகம்தான் தினமும் அதிகம் விற்கிறது.  நேற்று ஒரு பதின்பருவத்து இளைஞன் அந்த நூலில் கையெழுத்து வாங்கினான்.  நான் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கும்போதே, ”புத்தக விழாவுக்குப் போனால் நீ எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் வாங்கு, ஆனால் அந்த ஸீரோ டிகிரியை மட்டும் வாங்கவே வாங்காதே என்றார்கள் என் அம்மா, அதனாலேயே இதை வாங்குகிறேன்” என்று சத்தமாகச் சொன்னான் அந்தப் பையன்.  … Read more

நூறு கேள்விகள்

நூறு கேள்விகள். ஒருவரே எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். முதல் நூறு என்ற தலைப்பில் தொகுத்து வெளியிடலாம் என்று ஒரு நண்பர் சொன்னார். பெயரை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். ஃபேஸ்புக் பின்னூட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளை எடுத்துக் கொள்ள மாட்டேன். மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது வாட்ஸப். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அனுப்பலாம். டார்ச்சர் கோவிந்தன் டார்ச்சராக ஒரு கேள்வி கேட்டு ஆரம்பித்து வைப்பார் என நினைக்கிறேன். வரவேற்கிறேன். நூறு கேள்விகளும் என் பதில்களும் புத்தகமாக வரும். … Read more

சொற்கடிகை 14: தியானம் கற்றுக் கொள்வது எப்படி?

அது ஒரு பெரிய இடம். ஒய்.எம்.சி.ஏ. மைதானம். சுற்றி வர புத்தகங்களாக இருக்கும். புத்தகங்களுக்கு நடுவே தியானம் செய்வது நம் ஜக்கி கூட முயற்சிக்காதது. ராம்ஜி, காயத்ரி, வித்யா மூவரும் ஒரு இடத்தில் அமர்ந்து தியானித்துக் கொண்டிருந்தார்கள். காயத்ரிக்குக் கொஞ்சம் தியானம் வராது. லேசாகக் கண்ணைத் திறந்து பார்த்தவள் அமர்ந்து அமைதியாக தியானம் செய்யும் படி என்னிடம் சமிக்ஞை செய்தாள். பக்கத்து வீட்டில் வேடியப்பனும் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். மூன்றரையிலிருந்து ஏழரை வரை மகா தியானம் செய்து … Read more