இன்று என்ன நாள்?

எனக்குப் பொதுவாக இது எந்த மாதம் என்று தெரியாது. என்ன தேதி என்று தெரியாது. என்ன கிழமை தெரியாது. அதேபோல் இன்று எழுந்த போதும் நாள், கிழமை, மாதம் எதுவும் தெரியாது. ஆனால் ஒரு கேள்வி எழுந்தது. ரொம்ப நாளாக அவருக்குப் பிறந்த நாள் என்று கேள்விப்படவில்லையே? தாண்டி கீண்டிப் போய் விட்டதோ? யாரைக் கேட்கலாம்? அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்க்கலாமா? அவரையே கேட்டால் சுவாரசியம் இருக்காதே? அவர் வேறு வேலை மிகுதியால் பத்துப் பதினைந்து நாட்களாகப் … Read more

சோர்வாக இருக்கிறீர்கள், ஓய்வெடுங்கள்…

நான் என்னுடைய இணைய தளத்தில் எழுதுவதை என் நண்பர்கள் யாரும் ஃபேஸ்புக்கில் எடுத்துப் போட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். என் நண்பர்களை மட்டுமே கேட்டுக் கொள்கிறேன். மற்றவர்கள் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால், ஃபேஸ்புக்கில் எழுதுபவர்கள் பெரும்பாலும் ஒன்றும் தெரியாதவர்கள், படிக்காதவர்கள். மிக மேம்போக்கான அரசியல் அபிப்பிராயங்கள் கொண்டவர்கள். அதை விட முக்கியமாக, ஃபாஸிஸ மனோபாவம் உடையவர்கள். சற்று முன்பு நான் எழுதியிருந்த பதிவுக்கு ஒரு ஃபேஸ்புக் அன்பர் “சாரு, நீங்கள் சோர்வாக இருக்கிறீர்கள் போல் … Read more

யாருக்கு வேலை செய்கிறீர்கள்?

ஹிந்துத்துவ எதிர்ப்பாளர்களின் சமீப கால நடவடிக்கைகள் மோடியை இன்னும் பத்து ஆண்டுகளுக்கு பிரதம மந்திரி நாற்காலியிலேயே உட்கார வைக்கும் என்று தோன்றுகிறது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மையினர் நடத்தும் கல்விக் கூடங்களில் மோடிக்கு எதிரான அரசியல் பிரச்சாரம் நடந்தது. குறிப்பாக கிறித்தவ அமைப்புகளில். அது ஹிந்துக்களை ஒருங்கிணைக்கவே பயன்பட்டது. அது மோடிக்கு ஆதரவான வாக்குகளாக மாறியது. அரசியலில் ஆர்வம் இல்லாத ஹிந்துக்களைக் கூட மோடிக்கு ஆதரவாக ஒருங்கிணைக்கவே அது போன்ற மோடி எதிர்ப்புச் செயல்பாடுகள் பயன்பட்டன. இப்போது … Read more

The outsider… (8)

தியாகராஜாவை மீண்டும் தொடங்குவதற்கு முன் படிக்க வேண்டிய சில புத்தகங்களை முடிக்கலாம் என்று நினைத்து நேற்று அந்த்தோனியோ ஸ்கார்மேத்தாவின் The Days of the Rainbow நாவலை எடுத்து நேற்றே முடித்து விட்டேன்.  அது பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்.  ஆனால் ஒரு விஷயம் என் மனதில் திரும்பத் திரும்ப வட்டமிட்டுக் கொண்டே இருந்தது.  உலகில் எத்தனையோ நாடுகள் இருக்க ஏன் திரும்பத் திரும்ப சீலே? எத்தனை விளக்கினாலும் நானே இந்தக் கேள்வியைத் தொடர்ந்து கேட்டு, தொடர்ந்து … Read more

நாளையிலிருந்து தியாகராஜா…

நான்தான் ஔரங்ஸேப்… நாவலை முடித்து சற்று முன்னர்தான் ஸீரோ டிகிரிக்கு அனுப்பினேன். ஒருவழியாக அந்த நெடுங்கதை முடிந்தது. நாளையிலிருந்து தியாகராஜாவை மீண்டும் தூசி தட்டி எடுக்க வேண்டும். சிறிய நாவல்தான். மூன்று மாதத்தில் முடித்து விடலாம். ஏற்கனவே பாதி எழுதி விட்டேன் என்பதால் சிரமம் இல்லை.

ஒரே நாளில் உலகப் புகழ்

நுபுர் ஷர்மா, ஸல்மான் ருஷ்டி, தஸ்லீமா நசரீன், நம்முடைய பெருமாள் முருகன் எல்லோரும் மத நம்பிக்கைகளில் கை வைத்தார்கள். ஒரே நாளில் உலகப் புகழ் கிட்டியது. பெருமாள் முருகனைப் பார்த்துத்தான் ரொம்பவும் பொறாமைப் பட்டேன். கோவிலில் க்ரூப் செக்ஸ் நடக்கிறது என்று எழுதினாலும் எழுதினார், ஒரே நாளில் உலகப் புகழ் எய்தினார். இரண்டு காரணங்கள். ஒன்று, உலகம் பூராவிலும் உள்ள புத்திஜீவிகள். கோவிலில் க்ரூப் செக்ஸ் என்றதும் இந்த உலக புத்திஜீவிகள் அத்தனை பேரும் படு குஷியாகி … Read more