பொன்னியின் செல்வன் டிக்கட் (ஒரு குறுங்கதை)

காலையில் எங்கள் குடியிருப்பு மேனேஜர் தன் குடும்பத்துக்காக நான்கு பொன்னியின் செல்வன் டிக்கட் ஏற்பாடு செய்து தர முடியுமா என்று என் பத்தினியிடம் கேட்டிருக்கிறார்.  மேனேஜரால்தான் என் அன்றாட வாழ்க்கை பளுவில் தொண்ணூறு சதவிகிதம் குறைகிறது.  நானாவிதமான கடைகளுக்குச் செல்வதிலிருந்து மின்வாரியம், ரேஷன் கடை என்று எல்லா அலைச்சல்களையும் செய்வது அவர்தான்.  பத்தினியும் தன் செல்வாக்கைக் காண்பிப்பதற்காகவோ அல்லது வேறு நல்ல எண்ணத்திலோ நான் சாருவிடம் சொல்லி வாங்கித் தருகிறேன் என்று மேனேஜரிடம் வாக்குக் கொடுத்து விட்டாள்.  … Read more