போன ஜென்மத்தில் சேவலாக இருந்தவனைப் பற்றிய ஒரு கதை (அல்லது) சாசனம் : ஒரு நெடுங்கதை

அப்போது எனக்கும் என் பத்தினிக்கும் கல்யாணம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. இன்றைய கணக்கில் சரியாக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கலாப்ரியா நடத்திய குற்றாலம் கருத்தரங்கு.  விஷயம் தெரியாதவனாகவோ அல்லது அனுபவமின்மையினாலோ என் பத்தினியையும் அழைத்துக் கொண்டு குற்றாலம் போனேன்.  பகல் பூராவும் பேச்சு, உரையாடல், விவாதம்.  இரவிலும் பேச்சு, உரையாடல், விவாதம். ஒரே வித்தியாசம், இரவில் மதுவும் சேர்ந்து கொண்டது.  பகல் முழுவதும் அருவியில் பொழுதைப் போக்கிக் கொண்ட பத்தினிக்கு இரவில் என்ன செய்வது என்று … Read more