எனது நூலகம்

தியாகராஜா நாவலை விட்ட இடத்திலிருந்து எழுத ஆரம்பித்து விட்டேன். இனி ஒரு வருட காலத்துக்கு அந்த உலகில்தான் இருக்க முடியும். என் நண்பர்கள் சிலர் தங்கள் நாவலை எழுத பத்துப் பதினைந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக கூறினார்கள். எனக்கு அந்த லக்‌ஷுரி இல்லை. வயது 70. எனவே ஒரு ஆண்டில் முடித்தாக வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன். இடையில் கட்டுரைகளில் காலம் கடத்தக் கூடாது. எழுதிக் கொண்டிருக்கும்போது ஏதோ புத்தகத்தை எடுக்கத் திரும்பினேன். அப்போது கண்ட காட்சியைப் … Read more

போல் தோ நா ஸரா (நடனம்)

ஆர்.ஆர். சபா என்று அழைக்கப்படும் ரசிக ரஞ்சனி சபாவில் இன்று மாலை ஐந்தரை மணிக்கு நான் கலந்து கொள்ளும் நடன விழா பற்றி எழுதியிருந்தேன். நடனம் தொடர்பான என்னுடைய ஒரு சிறிய குறிப்பு பின்வருவது. ஆறு ஆண்டுகளுக்கு முன் எழுதியது. போல் தோ நா ஸரா… – Charu Nivedita

பிறழ்வெழுத்து பற்றி அராத்து: ஒரு விவாதம்

அராத்து ஃபேஸ்புக்கில் எழுதியிருப்பது: சாரு நிவேதிதாவிற்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டதை ஒட்டி அவர் எழுத்து பற்றி சின்ன விவாதம் ஓடியது. நல்ல விஷயம் தான். என் பங்குக்கு கொஞ்சம் ஞானும். டிரான்ஸ்கிரஸிவ் ரைட்டிங்க் பிறழ்வெழுத்து – உபயம் ஜெயமோகன் மீறல் எழுத்து – பொது இலக்கிய வாசககர்கள் இதில் டிரான்ஸ்க்ரெஸிவ் ரைட்டிங்க் என்பது கேட்க கொஞ்சம் கெத்தாக இருக்கிறது. அதன் அர்த்தத்தை தேடினாலும் ஓரளவு ஓக்கேவாக இருக்கிறது. டிரான்ஸ்க்ரெஸிவ் ரைட்டிங்க் என்பதை விக்கிபீடியா சொல்வதை வைத்து அப்படியே … Read more

ஸேவியன் க்ளாவர்

சாரு, நீங்கள் நடனம் பற்றி எழுதியதும் எனக்கு ஸேவியன் க்ளாவர் பற்றி ஞாபகம் வந்தது. உங்களுக்குப் பிடித்த கென்னி ஜியோடு இணைந்து அவர் உருவாக்கிய நடனத்தின் காணொலியை உங்களுக்கு அனுப்புகிறேன். ஏற்கனவே பார்த்திருந்தால் என்னைத் திட்ட வேண்டாம், ப்ளீஸ். ஸ்ரீ

செப் 29 மாலை: நாட்டிய நிகழ்ச்சியில் அடியேன்

நாளை – செப்டம்பர் 29 – மாலை ஐந்தரை மணிக்கு மைலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் நடக்க இருக்கும் நாட்டிய நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறேன். (30, சுந்தரேஷ்வரர் தெரு, மைலாப்பூர்) பொதுவாக கலை நிகழ்ச்சிகளின் போது பார்வையாளர் அனைவரும் நிகழ்ச்சி எப்போது தொடங்கப் போகிறது என்றுதான் ஆர்வம் கொண்டிருப்பார்கள். அதற்கு முன்னால் பேசுபவர்களை நிகழ்ச்சிக்கு இடையூறாகவே நினைப்பார்கள். எனவே எனக்குக் கிடைக்கும் ஐந்து பத்து நிமிடங்களில் என்னுடைய ஆகச் சிறந்த ஒரு பேச்சை வழங்குவேன். ஏனென்றால், … Read more

நொய்யல் – ஒரு நவீனத்துவ காவியம்

எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தமது வாழ்க்கை பற்றி எழுதுவதில் விருப்பம் அதிகம்.   எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற என்னுடைய முதல் நாவலே சுயசரிதத்தன்மை கொண்டதுதான்.  ஆனால் இப்படி சுயசரிதத்தன்மை கொண்ட பல நாவல்கள் இலக்கியரீதியாக வெற்றியடையாமல் வெறும் ஆவணமாக மட்டுமே மிஞ்சுவதையும் காண்கிறோம்.  மனிதராகப் பிறந்த எல்லோருக்குமே மற்றவரிடம் சொல்வதற்கு தன்னைப் பற்றிய ஒரு கதை இருக்கிறது.  ஒருவருடைய பாட்டி மண் பானை நிறைய தங்க நகைகளை வைத்துக் கொண்டிருந்திருப்பார்.  பேரனோ சிங்கிள் டீக்கு சிங்கி அடிப்பவனாக இருப்பான்.  … Read more