சாருவைப் புரிந்து கொள்வது எப்படி? : காயத்ரி

Warning: நீண்ட பதிவு மற்றும் சாருவைப் பிடிக்காதவர்கள் அப்படியே இதைக் கடந்து போக கேட்டுக் கொள்கிறேன். நான் படித்துப் புரிந்துகொண்ட சாருவை கூடிய மட்டும் சொல்ல விழைந்திருக்கிறேன்.* சாருவின் புனைவெழுத்தில் இதுவரை பரிச்சயம் இல்லாதவர்களுக்கு எனக்குத் தெரிந்ததை இங்கு சொல்ல முயற்சிக்கிறேன். தமிழில் உள்ள மற்ற புனைவுகளைப்போல் சாருவின் புனைவுகளை அணுகினால் ஒன்றும் புரியாது. ஏமாற்றம்தான் மிஞ்சும். சாரு தன்னுடைய கட்டுரை ஒன்றில்: “மார்க்கி தெ ஸாத் (Marquis de Sade), வில்லியம் பர்ரோஸ் (William Burroughs), … Read more

சகாக்கள்

பொதுவாகவே தமிழ் எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது முத்தம் கொடுத்துக் கொள்ளாத குறையாகக் கொஞ்சிக் கொள்வார்கள்.  ஆனால் எழுத்து என்று வரும்போது விஷத்தைக் கக்குவார்கள்.  சமீபத்தில் என் ஆவணப்படத்துக்காக ஒரு எழுத்தாளரைச் சந்தித்தேன்.  நேரில் இனிமையின் சொரூபமாகப் பேசியவர் எங்கள் சந்திப்பு பற்றி ஃபேஸ்புக்கில் எழுதும் போது விஷத்தைக் கக்கியிருந்தார்.  நான் அப்படி இல்லை.  தர்மு சிவராமு மாதிரி.  எனக்குப் பிடிக்காதவராக இருந்தால் வாய் வார்த்தையாக வணக்கம் கூட சொல்ல மாட்டேன்.  அவராகவே வலிய வந்து சொன்னாலும் … Read more

விசித்திர வீரியன் : அராத்து

2017 இல் எழுதி இருக்கிறேன். சாரு நிவேதிதா விஷ்ணுபுரம் விருதை பெறும் இந்த நேரத்தில் இதுவரை படிக்காதவர்களுக்காக பதிவிடுகிறேன். சாருஆன்லைன்.காம் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த கால கட்டம். ஒருநாளில் நான்கைந்து முறை ஏதேனும் கட்டுரை பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருப்போம். குடி, குட்டி, மது, மாது (இரண்டுக்கும் வேறுபாடு உண்டு) என்று சாரு நிவேதிதா கலர்ஃபுல்லாக இருந்தது போன்ற இமேஜுடன் இருந்துகொண்டிருந்த கால கட்டம் அது. (இப்போது என்பதால் இப்படி நீட்டி முழக்கி பம்ம வேண்டியுள்ளது). இலக்கியமாவது … Read more