டார்ச்சர் கோவிந்தனுக்குப் பிடிக்காத சட்டை

நான் சட்டை நன்றாக இல்லை என்று சொல்லலப்பா, உங்களுக்குப் பொருந்தலை என்றுதான் சொன்னேன். இல்லியே. வினித் பிரமாதமா இருக்குன்னு சொன்னானே? சின்னப் பசங்கள்ளாம் அப்டித்தான் சொல்லுவானுங்க. என்ன விஷயம்னா அவனுங்க சொல்றது சட்டையை. உங்களை அல்ல. உடனே வினித்துக்கு போன் போட்டுக் கேட்டேன். விஷயத்தையும் சொன்னேன். இனிமேல் டார்ச்சர் கோவிந்தன் பற்றிப் பேசினால் நான் விஷ்ணுபுரம் வட்டத்தில் சேர்ந்து விடுவேன். இதுதான் வினித்தின் பதில். மேலே படம்.

சாருவை ஏன் வெறுக்கிறார்கள்? அபிலாஷ் சந்திரன்

இவ்வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருதைப் பெறும் சாரு நிவேதிதாவை வாழ்த்துமுன் சில கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்தளவில் பதில் சொல்ல முயல்கிறேன்: சாரு எவ்வகையான எழுத்தாளர்? சாரு ஒரு எதிர்-புனைவாளர். எதிர்புனைவு என்றால் என்ன? சுருக்கமாக எளிமையாக சொல்வதானால் ஒரு கதைக்கும் கட்டுரை அல்லது குறிப்புக்குமான – தர்க்கத்துக்கும் அதர்க்கத்துக்குமான – இடைவெளியை அழிக்கும் நோக்கில் உருவானதே எதிர்புனைவு. அலெ ராப் கிரில்லெ என ஒரு எழுத்தாளர் இருக்கிறார் (The Beach, Jealousy ஆகியவற்றை எழுதியவர்). அவர் இவ்வகை புனைவுகளை … Read more

அடியேனுக்கு விஷ்ணுபுரம் விருது…

2022ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது அடியேனுக்கு வழங்கப்படுகிறது.  இது குறித்த அறிவிப்பு கீழே உள்ளது.  இந்தத் தேர்வுக்குக் காரணமாக இருந்த ஜெயமோகனுக்கும் மற்ற விஷ்ணுபுரம் வட்டம் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.  வழக்கம் போல் இது குறித்த வசைகளும் ஆரம்பித்து விட்டன.  வசைகளை ஜெயமோகனும் நானும் பகிர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம்.  தேகம் நாவலில் நான் எழுதியதையெல்லாம் மேற்கோள் காண்பித்துத் திட்டுகிறார்கள்.  அந்த அளவுக்கு உன்னிப்பாகப் படித்திருக்கிறார்களே என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.  இனிமேல் இது போன்ற வசைகளுக்கும் … Read more

சாபத்தை வரமாக மாற்றுவதற்கு ஓர் எளிய வழி

சார்,  உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனக்கு எந்தவித இசை அறிவும் கிடையாது. பின்வரும் இரு பாடல்களும் எனக்கு ஒரே மாதிரி தெரிகின்றன. நேரமிருந்தால் கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு அப்படித் தோன்றவில்லை என்றால் உங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டதற்காக மன்னியுங்கள். சாபம் ஏதும் தரவேண்டாம். ஏற்கனவே அப்படி ஒரு வாழ்வைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி! லெனி டியர் லெனி, நான் ஏன் சாபம் தரப் போகிறேன்?  ஒன்று தெரியுமா உங்களுக்கு?  நான் யாருக்குமே இதுவரை சாபமே தந்ததில்லை.  … Read more

ஒரு சுவாரசியமான வாழ்த்துச் செய்தி

சாருவுக்கு வாழ்த்துகள் நவீன தமிழ் இலக்கியத்தை ஒரு சிறு கூட்டத்திலிருந்து பெரும் கூட்டத்துக்குக் கடத்தியதில் என் தலைமுறையில் நால்வருக்குப் பெரும் பங்கு உண்டு. ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன். இப்படிச் சொல்லும்போது ஏனையோர் பங்களிப்பை நான் மறுதலிக்கவில்லை. அதேபோல, தமிழ் இலக்கியத்தில் என்னுடைய ஆதர்ஷங்களும் இவர்கள் இல்லை. ஆனால், இலக்கியம் தெரியாதவர்களிடமும் இலக்கியம் குறித்த மதிப்பைக் கூட்டியவர்கள் இவர்கள். அதனாலேயே, ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணியாற்றுகையில் ஒவ்வொரு புத்தகக்காட்சி சிறப்பிதழ்களின் நிறைவு நாளிலும் இவர்கள் … Read more

நான்தான் ஔரங்ஸேப்… முன்பதிவுத் திட்டம் (இன்னும் இரண்டு தினங்கள்)

நான்தான் ஔரங்ஸேப் இன்னும் இரண்டு தினங்களில் கைக்கு வந்து விடும்.  முன்வெளியீட்டுத் திட்டத்தில் சலுகை விலையில் நாவலை வாங்க விரும்புபவர்கள் இந்த இரண்டு தின்ங்களில் பணம் அனுப்பினால் அதனால் இரண்டு அனுகூலங்கள்.  சலுகை விலையில் கிடைக்கும்.  இரண்டு, நாவலில் என் கையெழுத்தும் இருக்கும்.  அதற்கான விவரங்கள்:   https://tinyurl.com/naanthaanaurangazeb