நண்பர்களின் கவனத்துக்கு…

இப்போது நான் எழுதப் போகும் விஷயத்தைப் பற்றி இன்னும் சில நாட்களில் விரிவாகவே எழுத இருக்கிறேன். நான் கடந்த மூன்று மாதங்களாக மிகக் கடுமையான மலச்சிக்கலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். மலச்சிக்கல் என்றால் நான்கு தினங்கள் கூட மலம் வெளியேறாமல், சாப்பிட முடியாமல் பெரும் அவதி. அதோடேயேதான் ஸ்ரீலங்காவும் சென்று வந்தேன். ஆச்சரியத்துக்குரிய வகையில் ஆயுர்வேத மருந்தும் காப்பாற்றவில்லை. அப்படிப்பட்ட நிலையில்தான் ஒருநாள் ஃபேஸ்புக்கில் சித்த மருத்துவர் பாஸ்கரன் பற்றித் தற்செயலாக அறிந்தேன். அது ஒரு வியாழக்கிழமை. பாஸ்கரன் … Read more

இசையும் உன் எழுத்தும் வேறல்ல… எழுதியவர்…

இக்கணத்தில் சிறைப்படுத்திய எண்ணம். எந்த ஒரு மதுவின் போதையும், எப்பேர்ப்பட்ட கலவியின் பரவசமும் Adajio for strings இல் மூழ்கி இருக்கும் மயக்கத்திற்கு ஈடு இல்லை .மற்றவை கொண்டாட்டம். ஆனால் Adajio for strings மெய்நிலை மறந்த பிரபஞ்ச சமர்ப்பணம்.எத்தனை மணி நேரம் மூழ்கித் திளைத்தேன் என்ற கணக்கே இல்லை .சில நிமிடங்களில் மனதின் அத்தனை உணர்வெல்லைகளுக்குள்ளும் புகுந்து பயணிக்கிறது. சில சமயம் மீள சாத்தியம் இல்லாத படுகுழி போல் தெரிகிறது.இருளில் மூழ்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் என் … Read more

இசையும் உன் எழுத்தும் வேறல்ல

இக்கணத்தில் சிறைப்படுத்திய எண்ணம். எந்த ஒரு மதுவின் போதையும், எப்பேர்ப்பட்ட கலவியின் பரவசமும் Adajio for strings இல் மூழ்கி இருக்கும் மயக்கத்திற்கு ஈடு இல்லை .மற்றவை கொண்டாட்டம். ஆனால் Adajio for strings மெய்நிலை மறந்த பிரபஞ்ச சமர்ப்பணம்.எத்தனை மணி நேரம் மூழ்கித் திளைத்தேன் என்ற கணக்கே இல்லை .சில நிமிடங்களில் மனதின் அத்தனை உணர்வெல்லைகளுக்குள்ளும் புகுந்து பயணிக்கிறது. சில சமயம் மீள சாத்தியம் இல்லாத படுகுழி போல் தெரிகிறது.இருளில் மூழ்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் என் … Read more

சாஸ்த்ரீய சங்கீதத்தைப் போல…

பெட்டியோ… நாவலை எழுத எழுத அத்தியாயம் அத்தியாயமாக ஸ்ரீராமுக்கும் ஸ்ரீக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன். இன்று அனுப்பிய அத்தியாயம் பற்றி ஸ்ரீராம் எழுதியது இது: நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு அத்தியாயமும் கவிதை போலவே இருக்கிறது. சாஸ்த்ரீய சங்கீதத்தைப் போல… சமஸ்கிருதப் பாடலைப் போல… உள்ளடக்கம் மிக அருமை. வாசகர்களுக்கு இந்த நாவல் மிகவும் நெருக்கமாக இருக்கும். கண்டிப்பாக ஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்சில் கொண்டாடுவார்கள்.

என் புத்தகங்கள் பிரசுரமானது எப்படி என்ற புராணம்…

எனக்கு ஆரம்ப காலத்தில் பதிப்பாளர்கள் யாரும் கிடைக்கவில்லை.  எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும், லத்தீன் அமெரிக்க சினிமா, ஸீரோ டிகிரி, கோணல் பக்கங்கள், ஜே.ஜே. சில குறிப்புகள் – ஒரு விமர்சனம், மற்றும் பலவிதமான சினிமா விமர்சனங்கள் எல்லாமே நான் பிரசுரம் செய்தவைதான்.  நண்பர்களிடம் பணம் கேட்கலாம் என்றால் நண்பர்கள் யாரும் இல்லை.  இருந்த நண்பர்களோ என்னை விட ஏழைகள்.  என் புத்தகங்கள் வெளிவந்தது எல்லாமே என் பணத்தில்தான். அதாவது, அவந்திகாவின் பணம்.  இன்று அவள் என் எழுத்துக்குப் … Read more

விரல்களின் வழியே வழிந்தோடும் இசை…

இன்று பெட்டியோ… நாவலின் ஒரு முக்கியமான அத்தியாயத்தை எழுதி முடித்தேன்.  வாழ்வே முடிந்து விட்டது போல் தோன்றியது.  கூடவே Ludovico Einaudiயின் இசையைக் கேட்டுக் கொண்டே எழுதினேன்.  போலிஷ் இயக்குனர் Andrzej Wajda இயக்கிய தெ கண்டக்டர் (1980) என்ற படத்தில் ஒரு காட்சி வரும்.  எண்பது வயது இசைக் கலைஞன் ஒருவனுக்கும் முப்பது வயது பெண்ணுக்குமான காதல் பற்றிய கதை.  இசைக் குழுவை தன் கரங்களால் இயக்கிச் செல்லும்போது அந்த இசைக் கலைஞனின் விரல்களின் வழியே … Read more